வேண்டுதல் நிறைவேற அம்மன் வழிபாடு

Amman Vellikkai Malai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் போராட்டத்துடன் தான் கழிக்கிறான். என்ன தான் பணவரவு தாராளமாக இருந்தாலும் சிலருக்கு ஆரோக்கிய சீர்கேடு இருக்கும். ஆரோக்கியம் சரிவர இருந்தால் சரியான வேலை இருக்காது. ஒரு வேளை ஆரோக்கியம் வேலை எல்லாம் இருந்தாலும் மன நிறைவு இருக்காது.

இத்துடன் சம்பாதித்த பணம் கையில் தங்காமல் போவது, வீண் விரயங்கள் ஆவது என ஏதோ ஒரு வகையில் பிரச்சனைகள் நம்மை சூழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான பிரச்சனைகள் தீர அம்பாளின் பாதங்களை நாம் பற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வழிபாட்டை குறித்த தகவலை தான் ஆன்மீகம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்தது நிறைவேற அம்மன் வழிபாடு

பொதுவாகவே வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் சுக்கிரன் போன்ற செல்வாதிவாதிகளுக்கு உரிய வழிபாட்டு நாளாக இருக்கிறது. இதே நாளில் அம்மனை நாம் இந்த முறையில் வழங்கும் போது நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதுடன் காரிய தடைகள் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் ஆலயம் அல்லது குலதெய்வ அம்மன் இப்படி ஏதேனும் ஒரு அம்மனை வழிபாடடு செய்ய தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த அன்னைக்கு நெல்லிக்காயினால் ஆன மாலையை சாற்றி வழிபட வேண்டும். இந்த நெல்லிக்கனியை ஒற்றைப்படையில் சேர்க்க வேண்டும். இதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபாடு செய்து இந்த நெல்லிக்காய் மாலை மஞ்சள் நிற நூலால் கோர்த்துக் மாலையாக போட வேண்டும். அப்படி கோர்க்கும் வேலையில் நீங்கள் எந்த அம்மனுக்கு இதை கோர்க்கிறீர்களோ அந்த தெய்வத்தின் மந்திரத்தை சொல்லுங்கள். அத்துடன் அன்னைக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு விடுங்கள்.

இந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வேண்டுதலை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறுவதுடன் அன்னையின் அருள் ஆசி அப்போதும் உங்கள் உடன்இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க முருகன் வழிபாடு

இந்த வேண்டுதல் நீங்கள் வேண்டியவற்றை பெற்றுத் தரக் கூடிய அற்புதமான வழிபாடு அல்லது பரிகாரம் என்றும் கூட வைத்துக் கொள்ளலாம். இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -