வேண்டுதல் நிறைவேற முருகன் வழிபாடு

murugan dheepam
- Advertisement -

கந்தா என்று மனம் உருகி அவரை அழைத்தாலே போதும் அடுத்த கணம் வந்து நின்று நம்மை காக்கக் கூடிய கருணைக் கடல் தான் இந்த கந்த பெருமாள். குழந்தை பேரு இல்லாதவர்கள், வீடு வாசல் அமைய வேண்டும் என நினைப்பவர்கள், திருமண தடை, கடன் தொல்லை இப்படி ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சந்திக்க கூடிய அனைத்து இன்னல்களையும் தீர்க்கக் கூடியவர் இந்த முருகப்பெருமான்.

அத்தகைய முருகனை வணங்குவதற்கு செவ்வாய்க்கிழமை மிகவும் உகந்த நாள் இது அனைவரும் அறிந்த ஒன்று தான். அத்தகைய நாளில் அவரை எப்படி வழிபட்டால் நம்முடைய இத்தனை பிரச்சனைகளும் தீரும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற செவ்வாய்க்கிழமையில் ஏற்ற வேண்டிய தீபம்

செவ்வாய்க்கிழமையில் இந்த தீப வழிபாடு செய்ய நினைப்பவர்கள் காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து முடித்து முருகப்பெருமானை நினைத்து பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு செவ்வாய் ஹோரை அந்த நேரத்தில் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி அவரை மனதார வணங்கி விட்டு வாருங்கள்.

இப்போது இந்த தீப வழிபாட்டை நாம் மாலை வேலையில் செய்யவது தான் மிகவும் உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. முருகப்பெருமான் படத்திற்கு சந்தனம் பொட்டு வைத்து முருகப்பெருமானுக்கு பிடித்த செவ்வரளி மலரால் மாலை சூட வேண்டும். அதன் பிறகு நெய்வேத்தியமாக சிறிதளவு கற்கண்டு வைத்தால் கூட போதும். இதை தவிர வேறு நெய்வேத்தியங்களை செய்ய முடிந்தால் செய்யலாம்.

- Advertisement -

இப்போது முருகப்பெருமான் படத்திற்கு முன்பாக முதலில் நட்சத்திர கோலம் போடுங்கள். அதில் ஓம் சரவணபவ என்ற நாமத்தை எழுத வேண்டும். அதன் பிறகு ஆறு அகல் விளக்கை இந்த நட்சத்திரக் கோலத்தில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமாக ஏற்றுங்கள். இதில் ஒரு தீபமாவது நெய் தீபமாக ஏற்றுவது சிறந்தது.

அப்படி ஏற்ற முடியாதவர்கள் ஒரு தட்டில் 6 வெற்றிலையை காம்பு நீக்கி விட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். இந்த ஆறு வெற்றிலையும் தட்டை சுற்றி வட்டமாக வைத்து விட்டு நடுவில் ஒரே ஒரு அகல் விளக்கை மட்டும் வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். அகல் விளக்கை சுற்றி இருக்கும் வெற்றிலையில் பூ வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்றி விட்டு முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ என்ன குறையோ அதை அவரிடம் கேளுங்கள். நிச்சயம் அதற்கு அவர் செவி கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் முதலாவது வாரத்தில் எந்த முறையில் தீபம் ஏற்றுகிறீர்களோ அதே முறையில் தான் ஆறு வாரமும் தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நகை பணம் சொத்து சேர வாராகி வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த தீப வழிபாடு ஆறு வாரங்கள் தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. உங்கள் பிரச்சனைகள் தீர்வதற்கான முயற்சியுடன் இந்த வழிப்பாடையும் செய்யுங்கள் நிச்சயம் கந்தன் அருள் புரிவார்.

- Advertisement -