வேண்டுதல் நிறைவேற 21 நாட்கள் வழிபாடு

vinayagar praying
- Advertisement -

நம்முடைய நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்களும் சுப காரியங்கள் தடையின்றி நடைபெற வேண்டும் என்று நினைப்பவர்களும் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். அப்படி விநாயகப் பெருமானை வழிபடும் பொழுது சில சூட்சுமமான பரிகாரங்களை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் 21 நாளில் நம்முடைய வேண்டுதல் நிறைவேற விநாயக பெருமானை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

முழு முதல் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் வழிபட்டோம் என்றால் நமக்கு வரவேண்டிய நல்ல நேரம் ஆனது விரைவிலேயே வந்து சேரும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் ஒரு காரியம் நடைபெறுவதற்கு இவ்வளவு நாட்கள் ஆகும் என்னும் பட்சத்தில் விநாயக பெருமானை நாம் வழிபட்டோம் என்றால் அந்த காரியம் விரைவிலேயே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த விநாயகப் பெருமானை மிகவும் எளிமையான முறையில் நம்மால் வழிபட முடியும். நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.

- Advertisement -

தொடர்ந்து 21 நாட்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். திங்கட்கிழமை அன்று ஆரம்பிப்பது மிகவும் சிறப்புக்குரியது. அதுவும் சதுர்த்தி திதியாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த விநாயகர் ஆலயத்திற்கு சூரிய உதயத்திற்கு முன்பாகவே சென்று விட வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது கையில் ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகருக்கு நெய் தீபத்தை ஏற்றி வைத்து அருகம்புல் மற்றும் செம்பருத்தி பூவை அணிவித்து நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை மனதார கூற வேண்டும். இப்படி கூறிவிட்டு கையில் தேங்காயை வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

பிறகு “ஓம் சர்வ சக்கர டம்டம் ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறிவிட்டு அந்த தேங்காயை சிதறு தேங்காயாக உடைத்து விட வேண்டும். தேங்காயை உடைத்து விட்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 21 நாட்கள் விநாயகர் பெருமானை வழிபட்டு விட்டு மந்திரத்தை கூறி சிதறு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

நினைத்த காரியம் நடைபெற்ற பிறகு விநாயகப் பெருமானுக்கு வஸ்திரம் வாங்கி கொடுத்து அபிஷேகத்திற்குரிய பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் செய்து படைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகை அதிகமாக சேர நெல்லிக் கொட்டை பரிகாரம்

மிகவும் எளிமையான அதே சமயம் சக்தி வாய்ந்த இந்த வழிப்பாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு விநாயகப் பெருமானின் அருளால் நினைத்தது நிறைவேறும் கேட்டது கிடைக்கும்.

- Advertisement -