பணவரவை அதிகரிக்கும் வெந்தய பரிகாரம்

venthaya pariharam
- Advertisement -

பணம் பத்தும் செய்யும், பாதாளம் வரை போகும் என்று அந்த காலத்திலேயே கூறி இருக்கிறார்கள். இப்பொழுது கேட்கவா வேண்டும்? இதற்கு ஏதுவாக தான் இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு அதிகமான அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் பேராசை பிடித்து திரிகிறார்கள். பணம் இருக்கும் நபர்களிடம் அதிகமாக பணம் சேருவதையும் பணம் இல்லாத நபர்களிடம் பணவரவே ஏற்படாத சூழ்நிலையும் இருக்கிறது. இந்த சூழ்நிலையை மாற்றி பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கி பண வரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கஷ்டப்பட்டு உழைத்தும் அதற்குரிய பலனை பெற முடியவில்லை என்று வருத்தப்படுபவர்களும், எவ்வளவுதான் பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணத்தை தங்களால் சேமித்து வைக்க முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்களும், தேவையில்லாத செலவுகள் வந்து பணம் வீண் விரயம் ஆகிறது என்று வருத்தப்படுபவர்களும் இந்த எளிய பரிகாரத்தை தங்கள் இல்லத்தில் செய்தாலே போதும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் உழைப்புக்கேற்ற பணம் அவர்களை வந்து சேரும்.

- Advertisement -

பணம் ரீதியான பிரச்சனைக்கு உதவி செய்பவர் தான் புதன் பகவான். அவரின் அருள் நமக்கு கிடைத்தால் நம்முடைய பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட புதன் பகவானுக்குரிய கிழமையாக புதன்கிழமை திகழ்கிறது. இந்த புதன்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு புதன் ஹோரையில் வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

பிறகு ஒரு பச்சை நிற சதுரமாக இருக்கக்கூடிய துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துணியை முந்தைய நாளிலேயே சுத்தம் செய்து பன்னீரால் நனைத்து காய வைத்து எடுத்து வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அந்த துணியில் 27 என்ற எண்ணிக்கையில் வெந்தயத்தை அதில் வைக்க வேண்டும். இதில் 27 என்பது 27 நட்சத்திரங்களை குறிக்கக்கூடியதாகும்.

- Advertisement -

இப்படி வெந்தயத்தை வைத்த பிறகு பச்சை நிற நூலால் மூட்டையாக கட்ட வேண்டும். கட்டிய இந்த மூட்டையை பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் பாதத்தில் வைத்துவிட்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வீட்டில் பச்சை கற்பூரம் இருப்பவர்கள் வெந்தயத்துடன் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். வழிபாடு அனைத்தையும் முடித்துவிட்டு இந்த மூட்டையை அன்றைய நாள் முழுவதும் பெருமாளின் பாதத்திலேயே இருக்கட்டும்.

மறுநாள் காலையில் அதாவது வியாழக்கிழமையில் வரக்கூடிய புதன் ஹோரையில் இந்த வெந்தயத்தை எடுத்து பணம் வைக்கக்கூடிய பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள் அல்லவா? நமக்கு பணவரவு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு குருபகவானின் அருளும் வேண்டும் என்பதால் வியாழக்கிழமை புதன் ஹோரையில் பணப்பெட்டியில் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஏக ஸ்லோக இராமாயணம்

இப்படி நாம் செய்வதன் மூலம் நமக்கு நியாயமாக வரவேண்டிய பணம் நம்மை வந்து சேரும். நம்முடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பண வரவும் ஏற்படும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும். வீண்விரயம் குறையும். சேமிப்புகள் உயரும்.

- Advertisement -