ஏக ஸ்லோக இராமாயணம்

ramar2
- Advertisement -

ராமாயணம் என்ற ஒரு நூல் இல்லை என்றால், ரகுகுல ராமரை பற்றி நாம் எல்லோருக்கும் தெரியாமலேயே போயிருக்கும். கம்பரால் எழுதப்பட்ட இந்த ராமாயணம், இதிகாசங்களில் மிக மிக சிறப்பு வாய்ந்தது. மிக மிக புனிதமானது. நேற்றுதான் அயோத்தியில், ராமருக்கு பிராணப் பிரதிஷ்டை ஆனது சிறப்பாக நடந்து முடிந்தது.

அதைத்தொடர்ந்து இன்றிலிருந்து தொடர்ந்து 48 நாள், ராமரை நினைத்து இந்த பாடல் வரிகளை படித்தால், ராமரின் பிராணப்ரதிஷ்டையில் கலந்துகொண்டு ராமரின் ஆசிர்வாதத்தை நேரடியாக பெற்ற பலன் கிடைக்கும். நிச்சயம் உங்கள் வேண்டுதல் 48 நாட்களுக்குள் பலிக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது அயோத்தியில் தான்.

- Advertisement -

ஆனால் ராம பக்தர்கள் இந்த உலகம் எங்கும் இருக்கிறார்கள். ராமரை நினைத்து, பக்தர்கள் எழுப்பும் ராம நாமம் இந்த உலகம் முழுவதும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த உலகத்தில் நீங்கள் எந்த மூளை முடுக்கில் வசித்து வரும் ராம பக்தர்களாக இருந்தாலும் சரி, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக சமர்ப்பணம். ராமரின் பிரதிஷ்டியை தொடர்ந்து, நம் வீட்டில் செய்ய வேண்டிய ராம வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ராம வழிபாடு

உங்க வீட்டில் ராமரின் பட்டாபிஷேக படம் இருந்தால் இந்த வழிபாட்டிற்கு சிறப்பு. இல்லை என்றால் பெருமாள் படத்திற்கு முன்பு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இல்லையென்றால் ஹனுமன் படுத்திருக்கும் முன்பும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தினமும் காலை அல்லது மாலை பூஜை அறையில் மண் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வையுங்கள்.

- Advertisement -

பிறகு ராம ராம என்ற ராம ஜெபத்தை உச்சரியுங்கள். இந்த வழிபாட்டில் ராமாயணம் படிப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. ஆனால், தினமும் ராமாயணத்தை முழுமையாக ஒருவரால் படித்து முடிக்க முடியாது. ஆனால் ஏக ஸ்லோக ராமாயணம் என்று ஒன்று இருக்கிறது. இது காஞ்சி மகா பெரியவா அவர்களால் நமக்கு அருளப்பட்டது. மொத்தம் 9 வரிகளைக் கொண்ட இந்த பாடல்வரிகளை படித்தால் மொத்த ராமாயணத்தை படித்த புண்ணியத்தை நம்மால் பெற முடியும்.

ஏக ஸ்லோக ராமாயணம்

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.

- Advertisement -

இன்றிலிருந்து தொடர்ந்து 48 நாள், உங்கள் வீட்டில் செய்யும் பூஜையில், ராமபிரானை நினைத்து இந்த வரிகளை படியுங்கள். ராமபிரானுக்கு துளசி இலைகளால் பூஜை செய்யுங்கள். உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதலை ராமபிரானின் பாதங்களில் வையுங்கள். எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருந்தாலும் அதை தீர்த்துக் கொடுக்க அந்த ராமபிரான் மீண்டும் மனித அவதாரம் எடுத்து உங்களுக்கு உதவி செய்ய வந்தாலும் நிச்சயம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இன்னொரு விஷயம் மறக்காம செஞ்சுடுங்க. இப்படி ராமாயணம் படிக்கும்போது உங்க பக்கத்தில் ஒரு மனப்பளகை போட்டு வையுங்கள். எதற்காக தெரியுமா? நீங்கள் படிக்கும் இந்த ராமாயண வரிகளைக் கேட்க அனுமன் வந்து, அந்த இடத்தில் உட்காருவார் என்பதும் ஒரு நம்பிக்கை. ராமநாமம் எந்த இடத்தில் எல்லாம் ஜபிக்கப்படுகிறதோ, அதைக் கேட்க ஹனுமன் தவறாமல் அந்த இடத்திற்கு வந்து விடுவாராம். நீங்கள் போட்டிருக்கும் மனப்பலகை அவருக்காக தான்.

நாளையிலிருந்து நீங்கள் செய்யப்படும் இந்த ஒரு மண்டல பூஜை உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும். உங்கள் வீட்டிற்கு சுபிட்சத்தை கொடுக்கும். ராமருக்கு பக்கபலமாக ஹனுமன் எப்படி இருந்தாரோ, அதேபோல உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களையும் துன்பங்களையும் துடைக்க உங்களுக்கு பக்க பலமாக துணைக்கு அனுமனும் வருவார்.

பெண்களுக்கு இந்த பூஜையை தொடர்ந்து 48 நாள் செய்ய முடியாது. மாதவிலக்காகும் நேரத்தில் பூஜை செய்வதை தவிர்த்து விட்டு, மீண்டும் இந்த பூஜையை தொடரலாம். தவிர உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேறு யாராவது இருந்தால் அவர்களை இந்த பூஜையை தொடர சொல்லலாம். ராமரின் பிராண பிரதிஷ்டை நடைபெற்று, அடுத்து வரக்கூடிய இந்த 48 நாட்களும் மிக மிக அற்புதம் வாய்ந்த நாட்கள். இந்த ஒரு மண்டலத்தை யாரும் தவற விடாதீங்க.

இதையும் படிக்கலாமே: ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டைக்குப் பிறகு, 12 ராசிக்கும் ராசிபலன்

ராமபிரானின் அருளை முழுமையாக பெற இதைவிட அற்புதம் வாய்ந்த நாட்கள் நமக்கு இனி எந்த பிறவியிலும் கிடைக்காது என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -