சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாக இதை செய்யுங்கள் போதும்! பிறகு பாருங்க வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி தான்..

couple-fight-lakshmi
- Advertisement -

குடும்பம் என்றால் அதில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அது ஒரு அளவுக்குள் இருப்பது தான் நல்லது. சதா சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்குள் மட்டும் அல்ல, குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் அது மனதளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகி மகிழ்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டிய எளிய விஷயங்கள் என்னென்ன? என்பதை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தை அதிகரிக்க படுக்கை அறையில் இரு கிளிகள் அல்லது ஏதேனும் பறவைகள் ஒன்றாக இருக்கும் ஜோடிகளாக இருக்கும் படம் ஒன்றை மாட்டி வையுங்கள். இதை பார்க்கும் பொழுதெல்லாம் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இருவருடைய புகைப்படத்தை கூட பெரிய அளவில் மாட்டி வைத்தால் கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

கணவன் மனைவிக்குள் தொடர்ந்து மனக்கசப்புகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்து கொண்டே இருந்தால் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம். இதற்கு முதலில் வெள்ளிக்கிழமைகளில் பூஜைக்குரிய எல்லா ஏற்பாட்டையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் இந்த பூஜையை செய்து வந்தால் நிச்சயம் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி மீண்டும் பிறக்கும்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தபத்தமாக தூய வெண்ணிற ஆடை அணிந்து கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்தால் இன்னும் சிறப்பு! முடியாத பட்சத்தில் மனைவி செய்யலாம். வெண்ணிற தாமரை மலர்கள் கொண்டு மாலையாக கோர்த்து மகாலட்சுமிக்கு சாற்றி கொள்ள வேண்டும். நைவேத்தியம் படைக்க சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யலாம் அல்லது கற்கண்டு வைத்தும் வழிபடலாம்.

- Advertisement -

வெண்தாமரை மலர்கள் கிடைக்காவிட்டால் செந்தாமரை மலர்களும் நீங்கள் தாராளமாக வைத்து வழிபடலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வேண்டும். புரிதல் உண்டாக வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து ஸ்ரீ சுக்தம் படிக்க வேண்டும். ஸ்ரீ சுக்த பாதை என்னும் மந்திர பாடல் சமஸ்கிருதத்தில் உள்ளன. எல்லோரும் இதை படிக்க முடியாது எனவே படிக்க முடியாதவர்கள் இதை பாடலாக ஒலி வடிவில் நீங்கள் ஒலிக்க விடலாம்.

இதையும் படிக்கலாமே:
தினமும் பணம் வேண்டும் என்று, உங்கள் வாயால் இப்படி கேட்டால், பணம் பல மடங்கு உங்களை தேடி வரத் தொடங்கி விடும். பிறகு பணக்கஷ்டத்திற்கு வீட்டில் இடம் இருக்காது.

மனதார இந்த மந்திர ஜெபத்தை காதால் கேட்க வேண்டும். அக்னி பகவானை வேண்டுவதாகவும், மகாலட்சுமியிடம் எல்லா சகல நலன்களையும், வளங்களையும் கொடுக்குமாறு பிரார்த்திப்பதாகவும் இப்பாடல் அமைந்துள்ளன. என்ன கேட்டாலும் அவ்வரம் அப்படியே கிடைக்கும் அற்புதம் உள்ள வரிகள் ஸ்ரீ சுக்தத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த மந்திரத்தை ஒலிக்க விட்டு மகாலட்சுமி தேவிக்கு தாமரை மலர் சாற்றி, தூய நிற ஆடை அணிந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வேண்டினால் விரைவாகவே கணவன் மனைவிக்குள் ஒரு நல்ல புரிதல் உண்டாகும். எப்பொழுதும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருக்க இந்த எளிய பரிகாரத்தை அனைவரும் செய்து பயனடையலாமே!

- Advertisement -