வீட்டில் தரித்திரம் உண்டாகி கடன் அதிகரிக்க நீங்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த பொருள்கள் தான் முக்கிய காரணம். இன்றே இந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு விடுங்கள்.

- Advertisement -

வீட்டில் நாம் பயன்படுத்தும் சில பொருட்களினால் வீட்டிற்கு லட்சுமி கடாட்சமும், சில பொருட்களினால் வீட்டிற்கு தரித்திரமும் ஏற்படுகிறது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அப்படி எந்த பொருட்களை பயன்படுத்துவதால் வீட்டில் தரித்திரம் உண்டாகி கடன் அதிகரிக்கும் என்பது குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் தரித்திரம் உண்டாகி கடன் அதிகரிக்க கூடிய பொருட்கள்:
முதலில் ஆடைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருந்தாலும் கூட கிழிந்து போன ஆடைகளை உடுக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. இப்படி கிழிந்த ஆடைகளை அணிவதால் வீட்டில் தரித்திரம் உண்டாகும். அதே போல பெண்கள் அணியும் ஆடைகளில் காலின் முழங்காலுக்கு மேலாக இருக்கும் ஆடைகளை அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதாவது ஆடை சிறிதாகி மேலே தூக்கிக் கொண்டு இருப்பது போன்ற உடைகளை அணியக் கூடாது.

- Advertisement -

அடுத்ததாக கால்மிதியடி இது வீட்டின் உள்ளே நுழையும் போதே முதலில் கண்ணில் படும் பொருள். இந்த கால்மிதியடி எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். சில வீடுகளில் கால் மிதியடி நன்றாக தேய்ந்து கிழிந்து போயிருக்கும் அந்த மிதியடிகளை நம் உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதையும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

அடுத்து பீங்கான் பொருட்கள் இதை பயன்படுத்தும் போது உடைந்து விட்டாலோ அல்லது விரிசல் விட்டாலும் அதை ஒட்டி பயன்படுத்தக் கூடாது. இதை பயன்படுத்துவதாலும் தரித்திரம் உண்டாகும். இந்த வகையில் மரப் பொருட்களும் சேரும் உடைந்த பொருட்களை சரி செய்யாமல் அப்படியே பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -

இவற்றில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது கதவு ஜன்னல்கள் தான். இவற்றில் இருக்கும் பழுதுகளை உடனே சரி செய்து விட வேண்டும். அதில் சத்தம் வரந்தாலோ அல்லது உடைந்து இருந்தாலோ விரிசல் இருந்தாலே வீட்டிற்கு தரித்திரம் உண்டாவதுடன் கடன் சுமையையும் அதிகப்படுத்தி விடும் என்று சொல்லப்படுகிறது.

இது மட்டும் இன்றி வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சாமான்கள் சாதம் வடிக்கும் பாத்திரம் தட்டு போன்றவை எல்லாம் இதில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.இவையெல்லாம் நெளிந்து ஓட்டையாகி இருந்தாலும் அவற்றை நாம் உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதை அப்படியே பயன்படுத்தினாலும் தரித்திரம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க கூடிய அனைத்தையும் தகர்த்தெறியக் இந்த விளக்கை ஏறினால் போதும். பணத் தடை, வியாபாரத் தடை, காரியத்தடை என அனைத்தையும் போக்கும் அற்புத பரிகாரம்.

வீட்டில் அன்றாட உபயோகிக்கும் சில பொருட்களாளே நம்முடைய தரித்திர நிலை அதிகரிக்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுவது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு இருப்பீர்கள். உங்கள் வீட்டில் இது போல தரித்திரம் உண்டாக்கும் பொருட்கள் இருந்தால் உடனே அப்புறப்படுத்தி கடன் எல்லாம் வாழ்வை வாழுங்கள்.

- Advertisement -