வீட்டில் சிறிய சாமி விக்ரகங்கள் வைத்திருந்தால் தெரியாமல் கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! பாவம் வந்து சேர்ந்துவிடும்.

vinayagar-pray
- Advertisement -

பொதுவாக கோவில்களில் பெரிய பெரிய விக்ரஹங்களை வைத்து வழிபடுவது சிறப்பு ஆனால் அதனையே நாம் வீட்டில் வைத்து வழிபட நினைத்தால் நமக்கு ஆபத்து தான் வரும் என்று எச்சரிக்கிறது சாஸ்திரம். வீட்டில் விக்ரகம் வைத்திருப்பவர்கள் அதனை முறையாக வழிபாடு செய்வது நல்லது. இல்லை என்றால் பெரிய பெரிய விக்ரகங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த வகையில் விக்ரஹங்கள் வைத்திருப்பவர்களுக்கு தேவையான சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

vikragam2

வீடுகளில் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் நம் கட்டை விரல் நீட்டினால் எவ்வளவு உயரம் இருக்கும். அந்த அளவை விட அதிகமாக வாங்கி வைக்க கூடாது. அந்த அளவை விட அதிக உயரமுள்ள விக்ரகங்களை வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்கு தினசரி அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். அப்போது தான் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். வெறுமனே விக்ரஹங்களை வாங்கி வைத்துவிட்டு எதுவும் செய்யாமல் இருந்தால் அதன் மூலம் நமக்கு பாவங்கள் வந்து சேரும் என்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

ஒரு விஷயத்தை நம்மால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் அந்த விஷயத்தில் சற்று கவனத்துடன் முடிவெடுப்பது நல்லது. அவ்வகையில் பெரிய விக்ரகங்களை வாங்க நினைப்பவர்கள் சற்று முன்னெச்சரிக்கையுடன் யோசித்து பின்னர் வாங்குவது நல்லது. விக்ரகங்கள் வைத்திருப்பவர்கள் அதற்கு உரிய நாட்களில் நைவேத்தியம் படைத்து, அபிஷேகங்கள் செய்து வழிபடுவது வீட்டிற்கு நல்லது.

vikragam

விநாயகர் சிலை, சிவலிங்கம், முருகன் சிலை, பெருமாள் விக்ரகம் முதல் பல வகையான தெய்வ சிலைகளை வாங்கி வீட்டில் வெறும் அழகிற்காக மட்டுமே அடுக்கி வைக்க கூடாது. அழகில் ஆபத்தும் உண்டு. விக்ரஹங்கள் தெய்வீக அதிர்வலைகளை உண்டு பண்ணக் கூடியவை எனவே அவற்றை கையாளும் பொழுது நமக்கு நிச்சயம் கவனம் தேவை. கோவில்களில் இருக்கும் சிலைகள் தெய்வீக அதிர்வலைகளை உண்டு பண்ணுவதால் தான் அங்கு நமக்கு ஒரு தெய்வீக உணர்வு நம்மை அறியாமல் ஏற்பட்டுவிடுகிறது. எனவே விக்கிரகங்களை வீட்டில் வைத்து இருப்பவர்கள் அதனை கோவிலுக்கு இணையாக நினைத்து சிறிய அளவிலான நைவேத்யம் படைத்து தினசரி பால், பன்னீர், சுத்தமான தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

- Advertisement -

உதாரணத்திற்கு முருகன் விக்ரகத்தை வைத்து இருந்தால் நீங்கள் அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து அவரின் வேலுக்கு இதே போல அலங்காரம் செய்து முருகனுக்கு உரிய மலரை சாற்றி, அவருக்கு உரிய நைவேத்தியம் அல்லது கல்கண்டு, வாழைப்பழம், பேரிச்சம்பழம், தேங்காய் போன்ற நைவேத்தியப் பொருட்களில் ஏதாவது ஒன்றை உங்களால் முடிந்த அளவிற்கு வைத்து ஊதுபத்தி காண்பித்து, ஒரு கற்பூரம் ஏற்றி வழிபட்டால் போதும்.

Lord-Murugan-1

நம்முடைய வேண்டுதல் உடனே பலிக்க செய்யக்கூடிய விக்கிரக வழிபாடு உயர்ந்த வழிபாடாக இருந்தாலும் அதனை தொடர்ந்து முறையாக செய்ய வேண்டுமென்பது தான் கூற்று. எனவே விக்ரஹம் வைத்திருப்பவர்கள் தினசரி இது போல் சிறிய அளவிலான உங்களால் முடிந்த நைவேத்யம் படைத்து ஏதாவது ஒரு மலரை சாற்றி அவருக்கு உரிய ஸ்தோத்திரம் உச்சரித்து தீப, தூப, ஆரத்தி காண்பித்து வழிபடலாம். அது போல் வழிபடும் பொழுது கட்டாயம் தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் புஷ்பத்தை போட்டு வையுங்கள். இப்படி விக்ரக வழிபாடு செய்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் நிச்சயம் நெருங்காது. கிரக தோஷங்கள், கர்ம வினைகள் யாவும் விலகி நன்மைகள் பெருகும் யோகம் உண்டாகும்.

- Advertisement -