இந்த மந்திரத்தை சொல்லி, வில்வ இலைகளால், சிவபெருமானுக்கு பூஜை செய்தால் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும்.

vilvam
- Advertisement -

வில்வமரத்தை வீட்டிலும், கோயில்களிலும் வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு மிகவும் பிடித்த வில்வ இலைகளை வைத்து பூஜை செய்வதனால் சூரியனை கண்ட பனிபோல நம்மிடம் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகிவிடும். அவ்வாறான மகிமை கொண்ட வில்வ இலையைப் பறிக்கும் பொழுது மிகவும் பயபக்தியுடனும், வில்வ இலை பறிப்பதற்காக அந்த மரத்தின் அனுமதியை பெறும் வகையிலும் இந்த மந்திரத்தை சொல்லி தான் பறிக்க வேண்டும். அவ்வாறான மந்திரம் என்ன என்பதனையும் அதன் பலன்கள் என்ன என்பதனையும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

vilvam

வில்வ இலை மந்திரம்:
“நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயோத்மனே
ஸம்ஸர விஷவைத்யஸ்ய ஸம்பஸ்ய கருணாநிதே
அர்ச்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்ஸமஸ்வ மகே”

- Advertisement -

விளக்கம்:
மோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளை உருவாக்கவும், லட்சுமி கடாட்சத்தை உருவாக்குவதற்கும் காரணமான வில்வமரமே உன்னை வணங்குகிறேன். வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிய விஷயத்திற்கு காரணமான இளகிய மனம் கொண்ட சிவபெருமானை பூஜிப்பதற்காக உந்தன் இலைகளை கிளளிக்கொள்கிறேன். நீ அதனைப் பெருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வில்வமரத்தை வேண்டிக்கொண்டு பிறகுதான் அதன் இலையைப் பறிக்க வேண்டும்.

vijaya-lakshmi

வீட்டில் வில்வமரம்:
வீட்டில் வில்வமரம் வளர்ப்பதினால் பல நன்மைகள் கிடைக்கிறது. அஸ்வமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலனும் கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், 108 சிவாலயங்களை சுற்றி வந்ததிற்கு ஏற்ற பலனும் கிடைக்கிறது. இந்த மரத்தின் காற்றை சுவாசித்தாலும் அதன் நிழல் நம் மீது பட்டாலும் அதீத சக்தி கிடைக்க பெறுகிறது.

- Advertisement -

வில்வ இலை பலன்கள்:
சிவபெருமானுக்கு வில்வ இலை வைத்து பூஜை செய்வதால் ஏழு ஜென்ம பாவங்களும் தீர்ந்து விடும் என்பது சித்தர்கள் சொன்ன வாக்கு. வில்வ மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதால் வில்வ மரத்தின் ஒரு இலை ஆயிரம் பொன் புஷ்பங்களுக்கு நிகரானது என்று பூஜை தத்துவங்கள் சொல்கின்றன. இவ்வாறான வில்வ இலையை பூஜை செய்வதற்காக சூரியன் உதிக்கும் முன்னரே பறித்துவிட வேண்டும்.

gold-pot

வில்வ மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் மூன்று இலைகள் கொண்டதாகத் தான் இருக்கும். இதன் இடது பக்க இலை பிரம்மா என்றும், வலது பக்க இலை விஷ்ணு என்றும், நடுவில் இருக்கும் இலை சிவன் என்றும் குறிக்கப்படுகிறது. சிவபெருமானால் படைக்கப்பட்ட வில்வமரம் அவரின் தலவிருட்சமாகும். இந்த வில்வ இலையை வைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்துவர கோடானகோடி பலன்களை பெறமுடியும். இந்த வில்வ இலைகளை பறித்து எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும், அவை காய்ந்து போனாலும் அவற்றில் இருக்கும் தெய்வ சக்திகள் என்றும் அழிவதில்லை.

shivan

இவ்வளவு விசேஷம் உள்ள வில்வ இலையை பறித்து பூஜை செய்து வர நல்ல பலன்கள் உங்களுக்கு உண்டாகும். இவற்றின் காய்களை இரண்டாகப் பிளந்து, அதனுள் உள்ள சதைப்பற்றுள்ள பகுதியை நீக்கிவிட்டு, அவற்றை நன்றாக உலரவைத்து, பின்னர் அதனுள் விபூதியை வைத்து, நெற்றியில் பூசி வந்தால் மிகவும் விசேஷமானதாக இருக்கும்.

- Advertisement -