இந்த விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

vibuthi
- Advertisement -

சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி, அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, ‘நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா’ அப்படி என்றுதான் கேட்பார்கள். அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது. இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. இது முற்றிலுமான ஆன்மீக ரீதியான உண்மையும் கூட. சிவ பக்தர்களுக்கு இந்த உண்மை தெரிந்ததுதானே!

vilvam

சரி, அன்றாடம் நாம் இட்டுக்கொள்ளும் இந்த திருநீறை மேலும் பல மடங்கு சக்தி வாய்ந்த நீறாக எப்படி மாற்றுவது என்பதை பற்றிய சிறிய ஆன்மீக தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டு பூஜை அறையில் விபூதியை எப்படி வைக்க வேண்டும்? எப்படி வைத்தால் அந்த விபூதியில் சிவனின் அம்சம் மேலும் அதிகரிக்கும் என்பதை பற்றிய ஒரு அரிய தகவல் உங்களுக்காக.

- Advertisement -

சிவபெருமானுக்கே உரியது வில்வமரம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதே மரத்தில் இருப்பது தான் வில்வக் காய். அந்த வில்வக்காயை எடுத்து இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு, வில்வக்காய் ஓட்டை திருவோடு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் உள்ளே இரண்டு மூன்று வில்வ இலைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

vilvam1

வில்வ காயின் ஓடு, அதன் உள்ளே முதலில் வில்வ இலைகள், அதன் மேலே சுத்தமான திருநீறு நிரப்பி விடுங்கள். முடிந்தால் அதற்கு மேலேயும் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிவனை மனதார வேண்டிக்கொண்டு, நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று இந்த திருநீறு பூசிக் கொண்டு போனாலே போதும். வரக்கூடிய தடைகளும் தடங்கல்களும் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

vilvam2

இந்தப் பிரசாதம் உங்களுக்கு சிவபெருமானின் கையில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்திற்கு சமம் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது. அந்த அளவிற்கு மகிமை வாய்ந்து, இந்த வில்வ காயின் ஓட்டில் இருக்கும் இந்த திருநீறு. தினமும் இந்த திருநீறை நெற்றியில் இட்டுக்கொண்டு உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள். நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -