உங்கள் பிரச்சனை தீராமல் விற்க வேண்டிய சொத்துக்கள் விற்காமல் தடைப்பட்டு கொண்டிருக்கிறதா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் நிலம் விற்பதற்கு நல்ல வழி கிடைத்திடும்

nilam
- Advertisement -

ஒரு சில குடும்பங்களில் தலைமுறை சொத்துக்கள் என்ற அனைவருக்கும் சரி பங்கு பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கும். அல்லது தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பெற்றோர்கள் சில சொத்துக்களை வாங்கி வைத்திருப்பார்கள். அவர்களின் திருமணம் அல்லது வியாபாரம் இவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள். இவ்வாறு அவர்கள் வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களை தேவைப்படும் நேரத்தில் விற்க முயற்சி செய்யும் பொழுது அவை விற்க்க முடியாமல் பல தடைகள் வந்து கொண்டிருக்கும். இடத்தை பார்த்து பிடித்துவிட்டது என்று சொல்பவர்கள் கூட வாங்க வரும் பொழுது ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வாங்காமல் சென்று விடுவார்கள். இவ்வாறு வரக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி உங்கள் நிலம் விரைவில் விற்பதற்கு முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

black-soil-land

ஒருவர் தங்களின் வாழ்க்கையில் வெற்றி கொள்வதற்காக வியாபாரத்தை பெரிது செய்ய வேண்டும் அல்லது புதிய வியாபாரம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து, அந்த சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கி தாங்கள் நினைத்ததை நடத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த வியாபாரத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தாலும், வியாபாரம் நஷ்டத்தில் சென்றாலோ வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர்களுக்கு இருக்கும் அந்த சொத்தை விற்க முயற்சி செய்வார்கள்.

- Advertisement -

ஆனால் இவ்வாறு நினைத்த உடனேயே அந்த சொத்தை விற்க முடியாது. இவர்கள் பல வழிகளில் முயற்சி செய்த போதிலும் ஏதேனும் தடை வந்துகொண்டுதான் இருக்கும். இதற்கு முதலில் நிலத்தின் அமைப்பைப் சரிபார்க்க வேண்டும். முதலில் அந்த நிலத்தின் வடிவம் சரியானதாக இருக்க வேண்டும்.செவ்வகம் அல்லது சதுர வடிவில் இருந்தால் தான் அங்கு வாழப்போகும் குடும்பத்தினருக்கு சந்தோஷம், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

vasthu

எனவே உங்கள் நில சரியான வடிவத்தில் இல்லை என்றாலும் வாங்குபவர்கள் மிகவும் யோசித்து தான் முடிவு எடுப்பார்கள். அடுத்ததாக தென்மேற்குப் பகுதியில் பள்ளமோ, கிணறோ இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தென்கிழக்குப் பகுதி மேடாக இருக்கிறதா? அல்லது வடகிழக்கு பகுதி மேடாக இருந்து வடமேற்குப் பகுதி தாழ்வாக இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் நிலத்தில் வட கிழக்குப் பகுதிக்கும் தென் கிழக்குப் பகுதிக்கும் இடையே ஏதாவது தேவையற்ற பொருள்கள், குட்டிச் சுவரு, பாழடைந்த இடம் இவ்வாறு ஏதேனும் இருந்தால் அவற்றை உடனே அகற்றிவிடுங்கள். அதேபோல் தென்கிழக்கிற்க்கும் தென்மேற்கிற்க்கும் இடையே மரங்கள் அல்லது முட்செடிகள் ஏதேனும் இருந்தது என்றாலும் அவற்றை சுத்தமாக அகற்றி விட வேண்டும். இவ்வாறு முதலில் உங்கள் நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்.

soil

அதன்பின் அந்த நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று, அங்கு வாழை இலையில் கைப்பிடி மண்ணை பரப்பி விட்டு, அதன் மீது “ஸ்ரீம் பௌமா” என்று விரலால் எழுதி, அதன் மீது இன்னொரு வாழை இலையை வைத்து, அதன் மீது ஒரு கைப்பிடி பச்சை அரிசியை பரப்பிவிட்டு, அதன் மேல் ஆறு நெய் தீபங்கள் ஏற்ற வேண்டும். பிறகு பரப்பி வைத்த மண்ணிலிருந்து சிறிதளவு மண்ணை கையில் எடுத்துக் கொண்டு, கைகளைக் கூப்பி, கண்களை மூடி, முருகனை வேண்டி, “ஓம் சரவணபவாய க்ரீம்” என்று மூன்று முறை சொல்லி, தீபத்தை மூன்று முறை சுற்றி வர வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் தொடர்ந்து செய்துவர உங்கள் நிலம் விரைவில் நல்ல லாபத்துடன் விற்க வழி கிடைக்கும்.

- Advertisement -