இனி வேலை தேடி செல்லும் போது இதை மட்டும் மறக்காமல் கையில் கொண்டு செல்லுங்கள். வீட்டிற்கு திரும்பி வரும் போது நிச்சயம் வேலையுடன் தான் வருவீர்கள்.

lord muruga
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பிடித்த வேலை கிடைப்பது என்பது அதை விட மிகப் பெரிய காரியம். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தினம் தினம் வேலை தேடி அலைபவர்களுக்கு தான் தெரியும். வேலை தேடுபவர்கள் இந்த ஒரு காரியத்தை செய்தால் நிச்சயம் வேலை கிடைப்பதோடு, பிடித்த வேலையிலும் அமரும் யோகமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விரும்பிய வேலை விரைவில் கிடைக்க எளிய பரிகாரம்:
முதலில் வேலை தேடுபவர்கள் வேலைக்காக வெளியே செல்வதாக இருந்தாலும், வேலைக்கான படிவங்களை நிரப்புவதாக இருந்தாலும் சுக்கிர ஓரையிலும், குரு ஓரையிலும் முயற்சி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அடுத்ததாக நல்ல வேலை, பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என முயற்சி செய்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் முருகர் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடும் போது நிச்சயம் அதற்கான நல்ல பலன் கிடைக்கும். செவ்வாய்க் கிழமையில் இதை செய்ய முடியாதவர்கள் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாளில் செய்யலாம். செவ்வாய்க் கிழமையில் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை தவற விடாமல், அந்த நாளில் தீபம் ஏற்றி வணங்கும் போது நிச்சயம் நீங்கள் நினைத்த வேலை உங்களுக்கு அமையும்.

இப்போது வேலை கிடைக்க வேலை தேடி செல்லும் போது நாம் செய்ய வேண்டுவதை பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வேலை தேடி எங்கு செல்வதாக இருந்தாலும் கையில் ஏதாவது இனிப்புக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இனிப்பானது சுக்கிர பகவானுக்கு உகந்த பொருள். வேலை கிடைக்க வேண்டும் என்றால் சுக்கிரன் அருள் கண்டிப்பாக தேவை. வேலை தேடி செல்லும் போது கையில் வெல்லக் கட்டி, சர்க்கரை போன்ற இனிப்பை கொண்டு செல்லலாம். இதெல்லாம் முடியாது என்பவர்கள் ஒரே ஒரு சாக்லேட் மட்டுமாவது கொண்டு செல்லலாம்.

- Advertisement -

அதே போல் வேலை தேடி செல்லும் பொழுது குரு ஸ்தானத்தில் இருக்கும் கோவில்கள், மகாலட்சுமி தாயார் ஆலயம், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்ட பிறகு சென்றால் நீங்கள் வேலை தேடி செல்லும் இடத்தில் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இவை அனைத்தையும் விட இன்னும் ஒரு முக்கியமான அதே நேரத்தில் சக்தி வாய்ந்த பரிகாரம் என்றே இதை சொல்லலாம். நல்ல வேலை, அரசாங்க வேலை அல்லது தொழில் தொடங்க, தொழில் முன்னேற்ற பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படி தொழில், வருமானம் சம்பந்தமான எந்த ஒரு காரியத்திற்கு நீங்கள் முயற்சி செய்பவராக இருந்தாலும், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு தினம் சென்று நாட்டு சர்க்கரை, வெல்லம் இரண்டையும் கலந்து எறும்புகளுக்கு தானமாக வைத்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு தொழில் சம்பந்தமான அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கொடுமையான கண் திருஷ்டியை கூட எளிமையாக விரட்டி அடிக்க மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்தாலே போதும். கண் திருஷ்டியால் கண் கலங்கும் கஷ்டம் வரவே வராது.

இந்த எளிய பரிகாரங்களை செய்து நீங்கள் விரும்பிய நல்ல வேலையில் அமர்ந்து நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகார முறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நிச்சயமாக செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -