சோதனைகளை கடந்து செல்ல பெண்கள் செய்ய வேண்டிய வழிபாடு

pray
- Advertisement -

பெண்களுக்கு வரும் சோதனைகளை வென்று, சாதனைகள் படைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒரு ஆண் இந்த சமுதாயத்தில் சுலபமாக வெற்றி காணலாம். அதே ஒரு பெண் இந்த சமுதாயத்தில் வெற்றி காண ரொம்ப போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும். பெண்களுக்கு இல்லறத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றாலும் சரி, அல்லது அவர்கள் சமுதாயத்தில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்றாலும் சரி, வெள்ளிக்கிழமை ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் போதும்.

பெண்களுக்கு தைரியம் அதிகரிக்கும். அவர்களுக்குள் இருக்கும் மன குழப்பம் நீங்கும். எதையும் சாதிக்கலாம் என்ற தெம்பு அவர்கள் மனதில் பிறக்கும் சரி அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பெண்கள் முன்னேற செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு 12 குண்டு மஞ்சள் தேவை. மஞ்சள் குரு பகவானின் அம்சம். வெற்றியை கொடுக்கக்கூடிய கடவுள். அந்த மஞ்சளை எடுத்து அரைத்து தூளாக தயார் செய்து கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். இருந்தாலும் மஞ்சள் கிழங்கை அரைத்து தூள் எடுக்கும்போது அதற்கு சக்தி இரட்டிப்பு மடங்காக இருக்கும்.

இந்த மஞ்சள் தூளை எடுத்துக்கொண்டு ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். எந்த கோவிலாக இருந்தாலும் சரி, ஆனால் அந்தக் கோவிலில் ஒரு விருட்சம் இருக்க வேண்டும். சில கோவில்களில் வேப்பமரம், அரசமரம், வில்வம் மரம், இப்படிப்பட்ட ஸ்தல விருட்ச்சங்கள் இருக்கும் அல்லவா. அப்படி ஒரு கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுத்துச் சென்ற மஞ்சளில் கொஞ்சம் தண்ணீர் விட்டு குழைத்து அந்த மஞ்சளை மரத்திற்கு பூசி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த மரத்தை மூன்று முறை அல்லது ஐந்து முறை வலம் வர வேண்டும். அந்த மரத்திற்கு முன்பாக நின்று அபிராமி அந்தாதி பாடல்களில் இருந்து ஏதாவது ஒரு பாடலை பாடுவது சிறப்பு. அபிராமி அந்தாதி என்று போட்டாலே, உங்களுக்கு ஆன்லைனில் பாடல் வரிகள் வந்துவிடும். அதிலிருந்து ஏதாவது ஒரு பாடல் வரிகளை பார்த்து படித்து அந்த மரத்தை தொட்டு வணங்கி வீடு திரும்புங்கள்.

இப்படி வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை செய்யும்போது பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்து இருந்தால் இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 வெள்ளிக்கிழமை, 5 வெள்ளிக்கிழமை என்று கணக்கு வைத்துக்கொண்டு இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: காலியாக இருக்கும் வீடு, கடைக்கு ஆட்கள் வர பரிகாரம்

உங்கள் வாழ்க்கையில் பின் தொடரும் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதை சரி செய்ய ஒரு வழியை அந்த ஆண்டவன் காட்டிக் கொடுப்பான். அந்த காலத்திலேயே பெண்கள் நலனுக்காக பின்பற்றி வந்த சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -