10 நாளில் சருமத்தை கொஞ்சம் கூட சுருக்கங்கள் இல்லாமல் பளபளன்னு தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு மாற்றுவதற்கு இதைவிட பெஸ்ட் டிப்ஸ் இருக்கவே முடியாது தெரியுமா?

skin-katrazhai-vitamin-e
- Advertisement -

மிகவும் மென்மையான தன்மையுள்ள நம்முடைய முக சருமம் அதன் நெகிழ்வுத் தன்மை காரணமாக முதுமை தோற்றத்தை விரைவாக கொடுத்து வருகிறது. முகத்தில் இருக்கும் துவாரங்களை இறுக செய்து, சருமத்தை இயற்கையான முறையில் இளமையாக தக்க வைத்துக் கொள்வதற்கு நாம் அதிக மெனக்கெடல் கூட செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும், தொட்டாலே வழுக்கி கொண்டு போகும் அளவிற்கு நம்முடைய சருமம் குழந்தை போல மிருதுவாகவும், மென்மையாகவும் மாறிவிடும். அப்படியான பொருட்கள் என்னென்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்கிற அழகு குறிப்பு ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

அழகு என்பது இயற்கையாக வர வேண்டியது. அதை செயற்கையான பொருட்களைக் கொண்டு எப்பொழுதும் பராமரிக்க முடியாது என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். நம் சரும பராமரிப்புக்கு அதிக அளவு உதவி செய்யக்கூடிய ஒரு வைட்டமின், விட்டமின் ஈ ஆகும். இந்த விட்டமின் ஈ சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் நம்முடைய சருமம் தங்கம் போல ஜொலி ஜொலிக்கும்.

- Advertisement -

பழச்சாறுகள், மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய், சோயா பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பாதாம், முட்டை, வேர்க்கடலை, இறைச்சி, கடல் உணவுகள், வஞ்சிரம், அவகோடா, கீரை, முட்டைகோஸ், முள்ளங்கி, பச்சையான காய்கறிகள் மற்றும் இலைகளில் விட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை அடிக்கடி உணவின் மூலம் எடுத்துக் கொள்வதால் நம்முடைய தேகத்தை பளபளக்க செய்யலாம்.

இப்படி உணவாக எடுத்துக் கொள்ள முடியாதவர்கள், அதை கேப்சூல் வடிவங்களில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். 10 கேப்சூல்கள் நிறைந்த மாத்திரை அட்டை ஒன்று 30 ரூபாயிலிருந்து கிடைக்கப் பெறுகிறது. கற்றாழை மடல் இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழை இயற்கையாகவே நம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை ஊக்குவிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. மேலும் நம்முடைய சருமத்தை வறண்டு போகாமல், எப்பொழுதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

- Advertisement -

கற்றாழை மடலை நீங்கள் கிழித்து எடுக்கும் பொழுது அதில் இருந்து ஒரு விதமான திரவம் வடியும். அதை முழுமையாக வடிய விட்டு விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் கற்றாழையை நன்கு அலசி சுத்தம் செய்ய வேண்டும். அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல்லை நான்கைந்து முறை சுத்தமான தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். கால் கப் அளவிற்கு இந்த ஜெல்லை நீங்கள் எடுத்துக் கொண்டால், இதனுடன் 400mg அளவிற்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை வெட்டி சேர்த்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
முடி முதிர்வை தடுத்து, காடு போல நல்ல நீளமா கரு கருன்னு முடி வளர வாரம் தோறும் தவறாமல் இதை மட்டும் செய்து விடுங்கள் போதும். அப்புறம் உங்க முடி வளர்ச்சியை பார்த்து நீங்களே அசந்து போவீங்க.

இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குள் இதன் நிறமோ அல்லது வாசமோ மாறினால் நீங்கள் இதை பயன்படுத்த வேண்டாம். இதை நீங்கள் தினமும் 10 நிமிடம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது முகம், கை, கால், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி உலர விட்டு விட வேண்டும். அதன் பிறகு துடைத்து எடுத்து விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பத்தே நாட்களில் உங்களுடைய முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் பள பளவென்று ஜொலிக்கும்.

- Advertisement -