இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து தொழில் செய்யும் இடத்தில் வைத்து பாருங்கள். ஒன்றுமே இல்லாத வியாபாரம் கூட ஓஹோ என லாபத்தை கொட்டி கொடுக்கும்.

karpooravalli-cash
- Advertisement -

நிறைய லாபம் சம்பாதிக்க வேண்டும். பெரிய தொழில் அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசையோடு சொந்தத் தொழிலில் காலடி எடுத்து வைப்பார்கள் சிலர். கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேளையில் இருப்பவர்கள் கூட அந்த வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற கனவோடு வருவார்கள். ஆனால், அவர்களுடைய கெட்ட நேரமோ என்னமோ, சொந்த தொழிலை தொடங்கி விட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு வருவார்கள்.

சிலர், ஆரம்பித்த தொழிலை முழுமையாக விட்டு விலகி வெளியே வரவும் முடியாமல், தொழிலை தொடர்ந்து நடத்தவும் முடியாமல் நடு ஆற்றில் நின்று தத்தளித்து வருவார்கள். காரணம் அதில் மூலதனமாக நிறைய பணத்தை முதலீடு செய்திருப்போம். நகையை அடமானம் வைத்து தொழில் தொடங்கியிருப்போம். அந்த தொழிலில் லாபத்தை எடுத்து, கடன் பிரச்சனையை அடைத்தால் தான் நிம்மதி என்ற நிலைமை.

- Advertisement -

இப்படி விவகாரமான சிக்கலில் சிக்கிக் கொண்டவர்கள் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்றால் என்னதான் செய்வது. முதலாவது அயராது உழைக்க வேண்டும். அடுத்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சில எளிமையான பரிகாரங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.  கஷ்டத்தில் இருக்கும் உங்களை காப்பாற்ற செலவு இல்லாமல் ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவை மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

தொழிலில் லாபம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று இலைகள் தேவை. துளசி இலை, கற்பூரவள்ளி இலை, தொட்டாற்சிணுங்கி இலை, இந்த மூன்று இலைகளையும் எந்த இடத்திலிருந்தாவது பறித்து எடுத்துக் கொண்டு வரலாம். வீட்டில் செடி இருந்தால் அதிலிருந்தும் பறித்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

இந்த மூன்று இலைகளையும் ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு அதில் பச்சை கற்பூரத்தை போட்டு, கல்லாப்பெட்டிக்கு பக்கத்திலோ அல்லது கல்லாப்பெட்டிக்கு உள்ளேயே வைத்தாலும் தவறு கிடையாது. இந்த பொருட்களில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறையான வாசம் எதிர்மறை ஆற்றலை அழிக்கும். நீங்கள் தொழில் தொடங்கியதில் யாருக்கேனும் பொறாமை இருந்தாலோ, நீங்கள் தொழில் தொடங்கியதை பார்த்து வயிற்று எரிச்சல் பட்டு கண் திருஷ்டி வைத்திருந்தாலோ, அதிலிருந்து வெளிவரக்கூடிய நெகட்டிவ் எனர்ஜியை அழிக்கக்கூடிய சக்தியும் இந்த பொருட்களுக்கு உண்டு.

இந்த கிண்ணத்தில் வைத்த இலைகள் காய்ந்து போனாலும் பரவாயில்லை. அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாதத்திற்கு ஒரு முறை கிண்ணத்தில் இருக்கும் பொருட்களை மாற்றி வைத்தால் போதும். இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு தொழிலில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கக் கூடாது. தொழிலில் முன்னேற என்ன வழி எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் அயராது உழைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தினம் தினம் பாடாய் படுத்தும் இந்த தோஷம் உங்க ஜாதகத்தில் இருந்தால் பயப்படாமல் வீட்டிலேயே எளிமையாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள் போதும். இது வரை உங்களை துரத்தி வந்த துன்பமெல்லாம் தூர போய் விடும்.

இந்த அல்ரா மாடல் உலகத்தில் ட்ரடியங்காக என்ன விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. எதை செய்தால் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று யோசித்து பல புதிய யுத்திகளை கையாள தொடங்குங்கள். நிறைய முயற்சி செய்யுங்கள். பல முயற்சிகள் தோல்வியை அடையலாம். ஆனால் அந்தப் பல தோல்விகளும் ஒரு வெற்றிக்கு உண்டான அனுபவங்கள் என்பதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு போராடுங்கள். நிச்சயமாக உங்களுடைய விடாமுயற்சியானது விஸ்வரூப வெற்றியை பெறும். நம்பிக்கை தாங்க வாழ்க்கை.

- Advertisement -