இந்த ஒரு இலையை கல்லாப் பெட்டியில் போட்டு வைத்தால் வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வருமானம் பெருகும்.

durkai amman business man
- Advertisement -

சொந்தமாக தொழில் செய்யும் ஒவ்வொருவரும் அதில் லாபம் ஈட்ட படாத பாடு பட வேண்டும். அப்படி பாடுபட்டு நடத்தும் தொழிலில் லாபம் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்தால் அவர்களின் நிலைமை படு மோசம் தான். இது போன்ற வியாபார சரிவை சரி செய்வதற்கான எளிய பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வியாபாரத்தில் அதிக லாபம் வர

இந்த பரிகாரத்தை சிறிய அளவில் தொழில் தொடங்குபவர் முதல் பெரிய நிறுவனம் வைத்திருப்பவர்கள் வரை அனைவரும் செய்யலாம். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தங்களின் உழைப்பு முயற்சியுடன் இந்த பரிகாரத்தையும் செய்து சிறந்த பலனை அடையலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் அன்று எலுமிச்சை மரத்தடியில் செய்ய வேண்டும். ஏனெனில் எலுமிச்சை கனியும் மரமும் துர்க்கை அம்மனின் சொரூபமாக திகழ்கிறது. இந்த பரிகாரத்தை காலை 10 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும். இந்த அஸ்வினி நட்சத்திர நாளை காலண்டரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இப்போது எலுமிச்சை மரத்தடியில் சென்று முதலில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள். அதன் பிறகு மூன்று ஊதுபத்தி ஏற்றி வைத்து விடுங்கள். இதற்கு மூன்று முழு கொட்டை பாக்கு, மூன்று வெற்றிலை, இரண்டு வாழைப்பழம் அனைத்தையும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

இதையெல்லாம் செய்த பிறகு அந்த மரத்தின் அடியில் தீபம் எரியும் இடத்தில் நீங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து உங்கள் நெற்றி அந்த மரத்தின் நிழல் விழும் மண் மீது படும் படி வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது உங்களுடைய வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: நாளை புதன் பகவானின் வருகையால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்.

இதையெல்லாம் செய்து முடித்த பிறகு மரத்திலிருந்து மூன்று இலைகளை பறித்துக் கொண்டு வந்து உங்கள் கல்லா பெட்டியில் போட்டு வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த ஒரு மாதத்திற்குள்ளாகவே உங்கள் வியாபாரம் நன்றாக நடக்க ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த இலை நன்றாக காய்ந்து சருகான பிறகு இதே போல வேறு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -