உன்னை வெறுப்பதாக
நான் பல முறை கூறினாலும்..
என்னை அறியாமல்
உன் தோள் சாய துடிக்கிறது
என் இதயம்..
இதையும் படிக்கலாமே:
தனிமையே எனக்கு துணை – காதல் கவிதை
காதலிக்கும் பலர், சண்டை இடும் சமயத்தில் அவர்கள் பொதுவாக கூறும் ஒரு வார்த்தை இனி என்னிடம் பேசாதே நாம் பிரிந்துவிடலாம் என்பதே. ஆனால் அப்படி பேசிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளே அவர்களின் மனமானது பிரிவை உணர்ந்து தவிக்க ஆரமிக்கும். அலைபேசியில் அழைப்பு வராதா என்று மனம் ஏங்கும். அது தான் காதலின் மாயம்.
இதில் சோகம் என்னவென்றால், மனமானது ஏங்கி தவிக்கும் வேலையில் அலைபேசியில் அழைப்பு வந்தாலும் மீண்டும் சண்டை தான் துவங்கும். ஆனால் ஒரு வழியாக ஒரு விதமான புரிதலின் காரணமாகவும், விட்டு கொடுத்தலாலும் இருவரும் சில மணி நேரங்களில் ஒன்று சேர்ந்து விடுவார். அது தான் காதல் செய்யும் அதிசயம்.
இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், அன்பு சார்ந்த கவிதைகள், அன்னை கவிதைகள், காதல் மெசேஜ், காதல் sms போன்றவரை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.