தனிமை கூட ஒருவருக்கு
துணையாகும் என்பதை உணர்தேன்..
நீ என்னை பிரிந்து சென்ற
கணம் முதல்..
இதையும் படிக்கலாமே:
நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை
எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு உண்டு. சில காதலர்கள் ஒரே இடத்தில் பணிபுரிவர் அல்லது ஒரே கல்லூரியில் பயிலுவர். அவர்களுக்கே கூட விடுமுறை நாட்கள் என்பது ஒரு வித தனிமையை உணர்த்தும். அப்படி இருக்கையில் வேலை காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களாலோ வெவ்வேறு ஊரில் வாழும் காதலர்களுக்கு தனிமை எவ்வளவு வலியை தரும்.
தன் காதலனையோ அல்லது காதலியையோ எப்போது காண்போம் என்ற ஏக்கம் அவர்களது கண்களில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதற்க்கு இடைப்பட்ட காலங்களில் தனிமையே அவர்களுக்கு துணையாக நிற்கும். ஏன் என்றால் தனிமையில் இருக்கையில் தான் அவர்கள் தங்கள் இணையோடு கனவுலகில் வாழ முடியும். ஆகையால் தனிமையை அவர்கள் விரும்புவதில்லை ஆச்சர்யம் இல்லை.
இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், அன்பு சார்ந்த கவிதைகள், அன்னை கவிதைகள், காதல் மெசேஜ், காதல் sms போன்றவரை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Thanimai kavithai in Tamnil with title Thanimai kooda thunai aagum.