நாளை ஏகாதசி திதி வழிபாடு

perumal
- Advertisement -

வைகுண்ட ஏகாதசிக்கு மட்டும் தான் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டும் என்பது கிடையாது. நிறைய பேர் மாதம் தோறும் வரக்கூடிய ஏகாதசி திதிக்கும் பெருமாள் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதத்தின் ஏகாதசி திதி என்று வருகிறது. விரதமிருப்பவர்கள், எந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், இந்த ஏகாதேசி திதியில், செல்வ வளத்தை பெருக்கக் கூடிய, ஒரு சிறப்பான வழிபாட்டை பற்றியும் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஏப்ரல் மாத ஏகாதசி வழிபாடு

இந்த ஏப்ரல் மாதம் ஏகாதசி திதியானது 4.4.2024 வியாழக்கிழமை மதியம் 12:00 மணி அளவில் பிறக்கவிருக்கின்றது. மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை 5.4.2024 காலை 10 மணி வரை இந்த ஏகாதசி திதி இருக்கிறது. விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 5 ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று தான் விரதம் இருக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் நாளை காலை பிரம்ம முகூர்த்த வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு பூஜையறையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் துளசி இலைகளால் பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். மண் அகல் விளக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தமான பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி மகாலட்சுமியையும், குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து உங்களுடைய விரதத்தை தொடங்கலாம். விரதம் இருக்க முடியும் என்பவர்கள் நாளைய தினம் விரதம் இருந்து இந்த ஏகாதசி வழிபாட்டை செய்யலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த விளக்கை ஏற்றி முடித்துவிட்டு, பிறகு வழக்கம் போல நீங்கள் உங்களுடைய உணவு முறைகளை பின்பற்றிக் கொள்ளலாம். தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -

விளக்கு ஏற்றி பூஜையறையில் சிறிது நேரம் அமர்ந்து ‘ஓம் நமோ நாராயணாய நமஹ’ என்ற மந்திரத்தை மனம் உருகி 27 முறை சொல்லுங்கள். பிறகு பெருமாளுக்கு துளசி தீர்த்தம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியோடு சேர்ந்து இருப்பதால் இந்த எளிமையான வழிபாட்டை வீட்டில் செய்வதன் மூலம் உங்களுக்கு 16 செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

நாளை வந்திருக்கக்கூடிய இந்த அற்புதமான நாளில் கட்டாயம் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். பெருமாளையும் வழிபாடு செய்ய வேண்டும். மறக்காமல் தாயாரை வழிபாடு செய்யுங்கள். நாளைய தினம் தாமரைப்பூ, மல்லிப்பூ, அல்லது வாசம் நிறைந்த ஏதாவது ஒரு பூக்களை வாங்கிக் கொண்டு போய் தாயாருக்கு கொடுத்து அந்த சன்னிதானத்தில் கொடுக்கக்கூடிய குங்குமத்தை வாங்கி வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொள்வது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

வீட்டில் மங்கலத்தை உண்டு பண்ணும். உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும். நாளைக்கு முடிந்தால் மகாலட்சுமி அம்சமான பசு மாட்டிற்கு உங்கள் கையால் முடிந்த பொருட்களை வாங்கி தானம் கொடுங்க கர்மாவை குறையும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -