தோல்வி உங்களை கண்டு தொலை தூரம் ஓடும். இதை மட்டும் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால்!

thilagam
- Advertisement -

சிலபேருக்கு எந்த வேலையை புதியதாக தொடங்கினாலும் அதில் தோல்வி தான் மிஞ்சும். வெற்றி என்ற வார்த்தைக்கு உண்டான சந்தோஷத்தினை வாழ்க்கையில் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அதே சமயம் தோல்வியை கண்டு அவர்கள் மனதில் ஒரு பயம் வந்திருக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் நாம் வெற்றி அடைவோமா என்ற சந்தேகம் அவர்களுக்குள்ளேயே வந்துவிடும். இப்படிப்பட்டவர்களுக்காகவே சுலபமான, ஒரு பிரத்தியேகமான பரிகார முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் ஒருவர் தோல்வி அடைவதற்கு காரணமே அவர்களிடம் இருக்கும் மனபயம் தான். நாம் தொடங்கிய காரியம் வெற்றி அடையுமா? அடையாதா என்ற சந்தேகம் தான் ஒருவருடைய தோல்விக்கு காரணம். நாம் எடுக்கும் முயற்சி கட்டாயம் வெற்றி தான் என்று எவரொருவர் நம்புகிறார்களோ அவர்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். முதலில் இதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெற்றி நம் பக்கம் தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு வெகு சீக்கிரமே பரிகாரத்தின் மூலம் பலன் கிடைத்துவிடும். இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவையான பொருட்கள் அரகஜா, அருகம்புல். இந்த அருகம் புல்லை மட்டும் விநாயகர் கோவிலுக்கு சென்று, அந்த விநாயகரின் பாதங்களில் அறுகம் புல்லை வைத்து ஒரு அர்ச்சனை செய்து எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள்.

arugampul-vinayagar

அருகம்புல்லை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இந்த அருகம்புல்லை அரகஜா டப்பாவில் போட்டு மூடி, மூன்று நாட்கள் வைத்துவிட வேண்டும். அதன் பின்பு தினம்தோறும் இந்த அரகஜாவை விநாயகரையும் குலதெய்வத்தை நினைத்து உங்களுடைய நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் பரிகாரம். இதை செய்து விட்டு உங்களுடைய தினசரி வேலையை செய்யத் தொடங்குங்கள்.

- Advertisement -

இதுவரை நீங்கள் மனதில் நினைத்து சாதிக்காத காரியங்கள் அத்தனையும், ஒவ்வொன்றாக வெற்றி அடைந்து கொண்டே வரும். இந்த திலகத்தை இட்டுக் கொள்வதற்கு முன்பு நீங்கள் செய்த முயற்சிகளுக்கும், இந்த திலகத்தை இட்டுக் கொண்ட பிறகு நீங்கள் செய்யக்கூடிய முயற்சிகளுக்கும் நிறைய வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

நீங்கள் சொல்வது தவறு, உங்களை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் கூட உங்கள் பேச்சைக் கேட்டு, உங்கள் முக வசீகரத்தில் மயங்கி உங்கள் சொல்படி நடப்பார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் இது. அரகஜாவை கடையில் இருந்து வாங்கும் போது மட்டும் ஒரிஜினலா என்று பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இந்தப் பரிகாரம் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -