உங்கள் மனதில் இருக்கும் தீராத ஆசைகள் தடையில்லாமல் நடக்க வேண்டும் என்றால் இந்த 1 பொருளை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்!

vinayagar-arugampul
- Advertisement -

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் இருப்பது சகஜம். எந்த ஒரு விஷயத்தை பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்கும் பொழுது, அதை அடைய வேண்டும் என்று நினைக்கும் பொழுது அது தானாகவே நம்மை வந்து சேரும் என்பது பிரபஞ்ச விதியாகும். ஆனால் துளி அளவும் சந்தேகம் இல்லாமல், அது நமக்கு கிடைத்தே தீரும், அதை நாம் செய்தே தீருவோம் என்கிற பாசிட்டிவ் வைப்ரேஷன் மட்டுமே நமக்கு பாசிட்டிவ் ரிசல்ட்டையும் கொடுக்கும். நம்முடைய ஆசைகள் தடை இல்லாமல் நிறைவேறுவதற்கு, தீராத வேண்டுதல்கள் பலிப்பதற்கு இந்த ஒரு பொருளை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது தாந்திரீகம்! அது என்ன பொருள்? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்கிற ரகசிய தாந்திரீக பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறீர்கள்.

ஒரு விஷயம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று நீங்கள் நினைக்கும் பொழுது அந்த விஷயம் கண்டிப்பாக கிடைக்காமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. துளி அளவும் சந்தேகமே இல்லாமல், அது நமக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும், எவ்வகையிலும் அது கிடைத்தே தீரும் என்று கடைசி வரை உறுதியாக நின்று அதற்கான உழைப்பை கொடுத்துப் பாருங்கள், கண்டிப்பாக அது காலதாமதம் ஆனாலும் உங்களிடம் தானாகவே வந்து சேரும்.

- Advertisement -

இது பிரபஞ்சத்தின் ரகசிய விதியாகும். இதை உணர்ந்தவர்களுக்கு நன்றாகவே விதியை பற்றிய தெளிவு இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் என்று நினைத்தால் நம்மிடம் காசு இல்லையே? எப்படி நாம் அதை வாங்குவோம்? என்று சிந்திக்க கூடாது. எப்படியாவது காசு நம்மிடம் வந்து சேரும், அதை எப்படியாவது நாம் நினைத்தபடி வாங்கி விடுவோம்.

அதில் எந்த விதமான மாற்றமும் இல்லை, சந்தேகமும் இல்லை என்று உறுதியாக ஒரு முறை இருந்து பாருங்கள். அந்த மொபைல் போன் வாங்குவதற்கான காசு எப்படியாவது உங்களைத் தேடி வரும் அல்லது அந்த மொபைல் போன் உங்களுக்கு எப்படியாவது கிடைக்கும். ஆனால் இதை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். உங்கள் நம்பிக்கையில் தான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய விஷயங்களும் அடங்கியிருக்கிறது என்பது தான் இதன் தாத்பரியம் ஆகும்.

- Advertisement -

முழு முதற் கடவுளான விநாயகர் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கக்கூடிய அற்புத சக்திகளை கொண்டுள்ளவர். இவரை வணங்கி விட்டு நீங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் அது கண்டிப்பாக வெற்றி அடையும் என்பது நியதி. விநாயகருக்கு மிகவும் உகந்த ஒரு பொருள் அருகம்புல் ஆகும். இந்த அருகம்புல்லுக்கு நிறையவே மனித எண்ணங்களை ஈர்க்கக் கூடிய சக்தி உண்டு. எலுமிச்சை பழத்திற்கும் இத்தகைய சக்திகள் உண்டு.

எனவே அருகம்புல் அல்லது எலுமிச்சம்பழம் ஒன்றை உங்கள் பாக்கெட்டில் எப்பொழுதும் வைத்துக் கொண்டு இருங்கள். நீங்கள் நினைத்ததை அடைந்தே தீருவேன் என்று இப்பொருளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு நீங்கள் உங்களுடைய உழைப்பை கொடுத்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் அடைய நினைத்ததை விரைவிலேயே அடைந்து விடுவீர்கள். அதன் பிறகு அந்த பொருளை பாக்கெட்டிலிருந்து நீங்கள் கோவிலில் எங்காவது வைத்து விட்டு வந்து விடுங்கள்.

- Advertisement -