எடையை குறைக்க எவ்வளவோ ட்ரை பண்ணிட்டீங்களா? பலனில்லை எனில் பழங்கால ஆயுர்வேத மூலிகைகள் பயன்படுத்தி பாருங்கள் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்குமே!

weight-loss-mooligai
- Advertisement -

இன்றைய நவ நாகரிக உலகில் பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு ஆகும். உடல் எடை அதிகரிப்பால் பல்வேறு வகையான நோய்களுக்கும் தள்ளப்படுகிறோம். ஒருமுறை உடல் எடை கூடி விட்டால் மீண்டும் அதனை குறைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். என்னவெல்லாமோ ட்ரை பண்ணிட்டேன் ஆனால் உடல் எடை மட்டும் குறைந்த பாடில்லை என்பவர்கள் ஆயுர்வேத மூலிகைகளை இப்படி பயன்படுத்தி பாருங்கள் பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். உடல் எடை குறைக்க ஆயுர்வேதம் சொல்லும் சில எளிய வழிகளை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான ஒரு விஷயம் இதுதான்! குளிர்ச்சியான உணவுகள், இனிப்பு வகைகள், எண்ணெய் உணவுகள் இந்த மூன்றையும் கண்டிப்பாக நினைத்து கூட பார்க்க கூடாது. இவற்றை எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு நீங்கள் குறைத்தால் தான் உடனடியாக உடல் எடையை குறைக்க முடியும்.

- Advertisement -

வெந்தயம்:
ஒரு டம்ளர் முழுக்க தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை டீஸ்பூன் மட்டும் வெந்தயத்தை கழுவி சேர்த்துக் கொள்ளுங்கள். இதை இரவு முழுவதும் ஊற விட்டுவிட்டு மறுநாள் காலையில் வெந்தயத்துடன் அப்படியே சேர்த்து தண்ணீரையும் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். இதனால் உடல் எடையானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். வெந்தயம் செரிமானத்திற்கு உதவுவதால் கொழுப்புகளை தங்க விடாமல் பாதுகாக்கும். பொய் பசியை உண்டாக்காமல் தடுக்கும். வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரிக்கும். இதில் இருக்கும் கேலக்டோமைன் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

திரிபலா:
திரிபலா என்பது தான்றிக்காய், கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் இந்த மூன்றையும் குறிப்பது ஆகும். இந்த மூன்றும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிக்க செய்து எடை இழப்பை ஏற்படுத்துகிறது. வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய வெந்நீர் அரை டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு திரிபலா பொடியை சேர்த்து அப்படியே கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து விட வேண்டும். திரிபலா சூரண பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

- Advertisement -

சரக்கொன்றை:
ஆயுர்வேத மூலிகைகளில் சரக்கொன்றை பல விதங்களில் கிடைக்கப் பெறுகிறது. இந்த மூலிகை எடை இழப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாத்திரை வடிவங்களில் கிடைக்கக்கூடிய இந்த ஆரக்வதா உடலில் இருக்கும் கொழுப்புகள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. மலமிளக்கியாக செயல்படுகிறது, இதனால் உடலில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறி உடல் எடை குறைகிறது. ஆனால் இதை மருத்துவர் ஆலோசனையின் பெயரில் மட்டுமே எடுத்துக் கொள்வது தான் நல்லது.

சாதவரி:
ஆயுர்வேத மருத்துவர்களின் பரிந்துரைப்படி சாதவரிப் பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வெதுவெதுப்பாக இருக்கக்கூடிய தண்ணீர் அல்லது ஒரு டம்ளர் பாலில் கலந்து பயன்படுத்த வேண்டும். இதனால் உடல் எடை கணிசமாக குறைய ஆரம்பிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.

அஸ்வகந்தா:
அஸ்வகந்தா ஆயுர்வேத மூலிகைகளில் மிகச் சிறந்த பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு அற்புதம் வாய்ந்த பொருளாக இருக்கிறது. இதை மாத்திரை மற்றும் பொடி வடிவங்களில் கிடைக்கிறது. எடை குறைப்பிற்கு பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு தாராளமாக பயன்படுத்தலாம். பாக்டீரியா, அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் எப்பொழுதும் உடம்பை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். மன அழுத்தத்தை தடுக்கும்.

- Advertisement -