உங்கள் முகம் தங்கம் போல் மின்ன வேண்டுமா? பௌர்ணமி போல் பிரகாசமாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த ஃபேஸ் பேக்கை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு மாறிவிடுவீர்கள்.

face
- Advertisement -

சில பெண்களின் முகத்தை பார்க்கும் பொழுது முழுமதி அவளது முகமாகும் என்ற பாடல் நினைவுக்கு வரும். பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு அழகான பிரகாசமான முகத்தை பெற்றிருப்பார்கள். இருந்தால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணுக்கும் தோன்றும். அப்படி பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் எந்தவித கரும்புள்ளிகளும் இல்லாமல் இருக்க வேண்டும். கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பிரகாசமாக்குவதற்கு பாதாமை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

எவ்வளவுதான் அழகான, வடிவான முகம் இருந்தாலும் அந்த முகத்தில் கரும்புள்ளிகளோ அல்லது வடுக்களோ இருந்தால் அந்த முகத்தின் அழகே கெட்டுவிடும். அவ்வாறு ஏற்படும் கரும்புள்ளிகளையும், வடுக்களையும் சரி செய்வதற்கு நாம் நிறைய கிரீம்களையும், ஃபேஸ் பேக்ளையும் உபயோகப்படுத்தி இருப்போம். இருப்பினும் அதனால் நமக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த பாதாம் ஃபேஸ் பேக்கை உபயோகித்து பாருங்கள். உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் திரும்பத் திரும்ப பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -

நம்முடைய சருமம் எப்படிப்பட்ட சருமம் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு நாம் ஃபேஸ் பேக் போட்டோம் என்றால் தான் அந்த பேஸ் பேக்கின் முழு பயனும் நமக்கு கிடைக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் ஃபேஸ் பேக் தயார் செய்யும் பொழுது பசும்பாலை உபயோகிக்க வேண்டும். எண்ணெய் பசை நிறைந்த சருமமாக இருப்பவர்கள் பசும்பாலை உபயோகப்படுத்தினால் முகத்தில் மேலும் பருக்கள் அதிகரிக்கும் என்பதை மறக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் பன்னீரை உபயோகப்படுத்த வேண்டும்.

இப்பொழுது முதலில் ஒரு கப் அளவிற்கு பாதாமை எடுத்து வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்ததும் அந்த பாதாமை ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து ஏர் டைட் கண்டெய்னரில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் இருந்து அதிமதுர பொடியை வாங்கி வர வேண்டும். ஒரு பவுலை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் பாதாம் பவுடர், இரண்டு ஸ்பூன் அதிமதுர பொடி போட்டு அதனுடன் 5 சொட்டு எலுமிச்சை சாறு விட வேண்டும்.

- Advertisement -

பேஸ்ட் பதத்திற்கு வருவதற்கு தேவையான அளவு பசும்பாலை அதில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை கட்டியில்லாமல் கலந்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி விட்டு துண்டை வைத்து நன்றாக ஒத்தி எடுத்த பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேஸ்ட் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

பாதாம் மற்றும் அதிமதுரத்திற்கு முகத்தை பிரகாசமாக கூடிய தன்மை இருக்கிறது. எலுமிச்சை பழத்திற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை இருக்கிறது. பசும்பாலிற்கு முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் தன்மை இருப்பதால், இவை அனைத்தும் சேர்ந்து நம் முகத்தை பிரகாசமாக மாற்றும்.

இதையும் படிக்கலாமே: முகத்தில் இருக்கும் கருமை நிறம் நீங்க உப்டான்(ubtan) ஃபேஸ் பேக்கை நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? இதை ஒரு முறை முகத்தில் போட்டால் நீங்கள் அப்படியே அழகு தேவதையாக மாறிவிடுவீர்கள்.

வாரத்தில் இரண்டு நாட்கள் என்ற வீதம் இந்த ஃபேஸ் பேக்கை நாம் உபயோகப்படுத்தி நம் முகத்தை கரும்புள்ளிகளை இன்றி பிரகாசமாக மாற்றுவோம்.

- Advertisement -