இந்த விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டால் போதும். அந்த சிவபெருமானே உங்களை பாதுகாக்க நெற்றியில் வந்து உட்கார்ந்து விடுவார்.

thiruneer-sivan
- Advertisement -

சிவபெருமானின் அம்சம் திருநீறு. வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்தக்கூடிய இந்த திருநீறு இடப்படாத நெற்றி எதற்கும் பிரயோஜனம் இல்லாத நெற்றி. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்றால், நாம் எல்லோரும் இறுதியில் ஒரு கைப்பிடி சாம்பலாக தான் மாறப் போகின்றோம். அதை உணர்த்தும் வகையில் தான் தினமும் நெற்றியில் இந்த திருநீறை பூசி கொள்கின்றோம். நீறில்லாத நெற்றி பாழ், என்று சொல்லுவார்கள். இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட சிவபெருமானின் அம்சம் நிறைந்த திருநீற்றை வைத்து தான் ஒரு பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நிறைய பேர் பயந்த சுபாவமாக இருப்பார்கள். துணிச்சலாக நடந்து கொள்ள மாட்டார்கள். வாழ்க்கையில் பயந்து பயந்து பின்னோக்கி நகர்ந்து செல்வார்கள்.

தெனாலி படத்தில் வருவது போல தான். எதைத் தொட்டாலும் பயம் என்று வாழ்க்கையில் முன்னேறவே முடியாமல் பல கஷ்டங்களை அனுபவித்து வருவார்கள். இதோடு மட்டுமல்லாமல் சில பேருக்கு இந்த பேய் பிசாசின் மீது எல்லாம் பயங்கர நம்பிக்கை இருக்கும். இதைத் தொட்டால் பயம், அதை தொட்டால் பயம், இந்த நேரத்தில் வெளியில் சென்றால் பயம். அந்த நேரத்தில் வெளியில் சென்றால் பயம், என்று பாதி நேரத்தை கழித்திருப்பார்கள். இப்படி உங்களுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பயம், உங்களை துரத்தி துரத்தி அடிக்கிறதா. இனி கவலையே வேண்டாம். இந்த திருநீறை நெற்றியில் பூசிக்கொள்ளுங்கள். அந்த சிவபெருமானே உங்களுக்கு பாதுகாப்பாக உங்களுடன் வருவார்.

- Advertisement -

மன பயம் போக்கும் திருநீறு:
அப்படி என்னங்க அதிசய திருநீறு அது. அந்த திருநீற்று பற்றி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த சக்தி வாய்ந்த திருநீற்றை நம் கையால்தான் தயார் செய்யப் போகின்றோம். இந்த சிவபெருமானின் அம்சம் கொண்ட திருநீறு உருவாக்குவதற்கு நமக்கு பசுஞ்சாண திருநீறு தேவை. வாசம் இல்லாத, அதிக வெள்ளை நிறம் இல்லாத பசுஞ்சாண விபூதி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

வாங்கி வந்த திருநீறை ஈரம் இல்லாத வாழை இலையில் கொட்டி பரப்பி கொள்ள வேண்டும். பூஜையறையில் வாழையிலேயே வைத்து அதன் மேலே விபூதியை கொட்டிக் கொள்ளுங்கள். தர்ப்பை புல்லை எடுத்து அந்த தர்ப்பை புல்லால் இந்த விபூதியின் மேல் 108 முறை ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை எழுத வேண்டும். 108 நமசிவாய மந்திரத்தை எழுதப்போகின்றோம். ஒருமுறை ஓம் நமசிவாய மந்திரத்தை எழுதிவிட்டு அதன் மேலேயே இன்னொரு முறை எழுதினாலும் தவறு கிடையாது. ஓம் நமசிவாய மந்திரம் அந்த திருநீற்றில் 108 முறை எழுதப்பட வேண்டும். அவ்வளவுதாங்க.

- Advertisement -

அதன் பின்பு அந்த விபூதிக்கு மேலே ஒரு சூடம் வைத்து ஏற்றி விடுங்கள். சிவபெருமானை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். அந்த கற்பூரம் எரிந்து சாம்பல் ஆகும் வரை சிவபெருமானின் நாமம் உங்கள் மனதில் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவபெருமானை அழைத்து நீங்கள் நாமத்தை உச்சரிக்க சிவபெருமானே வந்து அந்த சூடத்தில் இறங்கி திருநீரில் தங்கி விடுவார். இறுதியாக சூடம் எரிந்து முடிந்த பின்பு, அந்த விபூதியை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி அந்த நீறை நெற்றியில் பூசிக் கொண்டாலே போதும் சிவபெருமான் உங்களுடன் துணை ஆக நிற்பார்.

இதையும் படிக்கலாமே: குரு பெயர்ச்சி பலன்கள் 2023 – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

தினமும் இந்த திருநீறை குழந்தைகளுக்கு நெற்றியில் பூசி அனுப்பினால் கண்ணுக்கு தெரியாத காத்து கருப்பு அவர்களை தீண்டாது. பெரியவர்கள் இந்த விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டு சென்றால், சென்ற காரியம் ஜெயம் ஆகும் உங்களுக்கு மன பயம் இருந்தால் அந்த மன பயத்திலிருந்து வெளிவர இந்த ஒரு விபூதியே போதும். சிவபெருமான் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் இந்த திருநீறின் மூலம் கொடுத்து விடுவார். மிக மிக எளிமையான பரிகாரம் இது. நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள். வாழ்வில் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்களை பெறுவீர்கள் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -