மனைவியின் பெயரோடு கணவர் பெயரை ஒருமுறை இப்படி எழுதி விட்டால் போதும். மனைவி பேச்சுக்கு பிறகு மறு பேச்சே இருக்காது.

fight-mudra
- Advertisement -

சில வீடுகளில் கணவன் மனைவிக்குள் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அதே சமயம் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கும். நிறைய வீடுகளில் நாம் பார்த்ததுண்டு. மனைவி என்பவள் அடிமையாக, அடங்கித்தான் இருக்கவேண்டும். கணவனின் கைதான் ஓங்கி இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் மனைவியை ஆலோசனை செய்ய மாட்டார்கள். கணவன் இஷ்டத்திற்கு தான் அந்த வீட்டில் ஆட்சி நடக்கும். சொல்லப்போனால் மனைவி ஒரு வேலைக்காரியாக இருக்கும் அளவிற்கு சூழ்நிலை. சில வீடுகளில் இதற்கு எதிர்மறையாக நடக்கும். மீனாட்சியின் ராஜ்ஜியம்தான் வீட்டில். கணவர் சொல் சுத்தமாக எடுபடாது.

குடும்ப வண்டியை ஓட்டி செல்வதற்கு இரண்டு சக்கரங்களாக கணவனும் மனைவியும் இருக்க வேண்டும். ஒரு சக்கரம் இல்லை என்றால் வண்டி சரியாக ஓடாது. ஒரு சக்கரம் தடுமாறினாலும் வண்டி நிலைகுலைந்து போய் விடும். இதை புரிந்து கொண்டு கணவனும் மனைவியும் எல்லாவிதத்திலும் சமம் என்று எந்த குடும்பத்தில் நினைக்கிறார்களோ, அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நிலையாக இருக்கும். சரி, விஷயத்திற்கு வருவோம். கணவன் பேச்சை மனைவி கேட்க வேண்டும் என்றாலும் சரி, மனைவியின் பேச்சைக் கணவன், கேட்டு நடக்க வேண்டும் என்றாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். இதை தவறான காரியத்திற்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. ஞாயம் உள்ளவர்கள் பரிகாரத்தை செய்வதன் மூலமே பரிகாரத்திற்கு பலன் கிடைக்கும். அடுத்தவர்களை அடக்கி ஆள வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு பரிகாரத்தை செய்தாலும் பலன் இருக்காது.

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கிழிசல் இல்லாத பிரியாணி இலை ஆக இருக்கட்டும். அதில் நீல கலர் பேனாவைக் கொண்டு முதலில் கணவன் பெயரை எழுதுங்கள். அதன் கீழே மனைவியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். பெயர்கள் எழுதிய இலையை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். அதன் உள்ளே பச்சை கற்பூரத்தை போட்டு மூடிவிடுங்கள்.

- Advertisement -

இதை கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையிலேயே அமர்ந்து உங்களால் எவ்வளவு மணி நேரம் முடியுமோ, அத்தனை மணி நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்னுடைய வாழ்க்கை துணை என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மனதார பிரபஞ்சத்திடம் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் கணவராக இருந்தால் ‘மனைவி என்னுடைய பேச்சைக் கேட்க வேண்டும்’ என்று பிரார்த்தனை செய்யலாம். மனைவியாக இருந்தால் ‘கணவர் என் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்’ என்று மனதார பிரார்த்தனை செய்யலாம்.

வேண்டுதலை முடித்துவிட்டு இந்த டப்பாவை எடுத்து ஏதாவது ஒரு அலமாரியில் யார் கண்ணுக்கும் தெரியாமல் பத்திரமாக அப்படியே வைத்து விடுங்கள். தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் நீங்கள் தயார் செய்த டப்பாவை உங்கள் கையில் வைத்துக்கொண்டு தீபத்தின் முன்பு, பூஜை அறையில் அமர்ந்து இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைக்கும் போது நிச்சயமாக உங்கள் வேண்டுதலுக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -