சப்பாத்தி மாவு, பூரி மாவு பிசைய, இனி கஷ்டப்பட வேண்டாம். ஒரு நிமிஷத்துல, கை படாமல், இப்படி பிசைஞ்சுக்கோங்க! செம ஐடியா இது. ட்ரை பண்ணி பாருங்க.

chapthi-maavu
- Advertisement -

சில பேருக்கு என்ன தான் ட்ரை பண்ணாலும் சப்பாத்தி மாவையும், பூரி மாவையும் சரியான பதத்தில் பிசைய முடியாது. மாவில் தண்ணீர் கம்மியாகி விடும், அப்படி இல்லை என்றால், தண்ணீரை நிறைய ஊற்றி மாவை பிசைந்து விடுவார்கள். சப்பாத்தி மாவு பிசைவதற்கு இப்போதெல்லாம் மிக்ஸியிலேயே தனித்தனியாக ஜார்கள் வந்துவிட்டது. ஆனால், நம் வீட்டில் இருக்கும் மிக்ஸி ஜாரிலேயே சப்பாத்தி மாவை பிசைய முடியும். அதுவும் மொத்தமாக 30 செகண்ட்ஸ்ல! அது எப்படினு நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்களா? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

chapathi-maavu

நம் எல்லோரது வீட்டிலும் பெரிய மிக்ஸி ஜார் இருக்கும். அதை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில், ஒரு கப் அளவு கோதுமை மாவை போட்டுக்கொள்ளுங்கள். மாவுக்கு தேவையான அளவு உப்பு, எந்த கப்பில் மாவை அளந்தீங்கலோ, அதே கப்பில், 1/2 கப் அளவு தண்ணீரை மாவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, மிக்ஸியை மூடி, முதலில் ஒரு ஓட்டு ஓட்டங்கள். 10 செகண்ட்ஸ். மிக்ஸியை நிறுத்தி விட்டு, மீண்டும் 10 செகண்ட்ஸ். மீண்டும் மிக்ஸியை நிறுத்திவிட்டு, மூன்றாவது முறை 10 செகண்ட்ஸ். அவ்வளவு தான்.

- Advertisement -

சப்பாத்தி மாவு சூப்பராக சாஃப்ட்டாக தயாராகியிருக்கும். அப்படியே அந்த மாவை எடுத்து உங்களது விரல்களால் சரியான வடிவத்திற்கு கொண்டு வந்து விடலாம். கஷ்டமே கிடையாது. இந்த முறையில் உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய மிக்சிக்கோ, மிக்ஸி ஜாருக்கோ எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. ரிவர்ஸ் பட்டன் எல்லாம் வேணாங்க! 1ல் வச்சு மிக்ஸியை ஓட விடுங்கள் போதும்.

chapathi-maavu1

இந்த சப்பாத்திக்கு, ஈஸியாக செய்யக்கூடிய ஒரு குருமாவயும் பார்த்து விடலாமா?
Step 1:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் 1/2 மூடி தேங்காய் துருவல், பட்டை 1, கிராம்பு 2, ஏலக்காய் 1, சோம்பு – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, முந்திரி பருப்பு – 10 இவைகளை ஒன்றாகச் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

Step 2:
குக்கரை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதில் பிரியாணி இலை, அன்னாசிப்பூ, நட்சத்திர சோம்பு, இப்படியாக உங்கள் வீட்டில் என்ன வாசனை பொருட்கள் இருந்தாலும் தாளித்துக் கொள்ளலாம். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 போட்டு, பொன்னிறமாக வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியவுடன், பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி 1 சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும்.

veg-kuruma

Step 3:
தக்காளி பாதி அளவு வதங்கிய பின்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்டின் பச்சை வாடை போன பின்பு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மஸ்ரூம், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, இப்படியாக உங்களுக்கு தேவையான காய்கறிகளை கொஞ்சம் பொடியாக நறுக்கி சேர்த்து, 20 வினாடிகள் வதக்கிய பின்பு, குருமாவிற்கு தேவையான உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து, ஒரு நிமிடங்கள் வரை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி, மிதமான தீயில் ஒரு விசில் வைத்தால் போதும். கமகம வாசத்தில் குருமா தயார். இறுதியாக கொத்தமல்லி தழையை தூவி சப்பாத்திக்கு பரிமாறிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
சூப்பர் ரவா இட்லி செய்வது ரொம்ப ரொம்ப சுலபம் தான். 2 பொருள் போதும். சட்டுனு ரெடி பண்ண கூடிய, சூப்பர் டிஃபன் இது! மிஸ் பண்ணாம பாத்து தெரிஞ்சுக்கோங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -