சமையலில் சுவையை கூட்டும் இந்த ஒரு பொருளை வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும். நீங்கள் செய்யும் சமையல் மணமணக்க அனைவரையும் உங்கள் வீட்டு பக்கம் இழுக்கும்

vadagam
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் உணவின் சுவை சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கைப்பக்குவம் இருக்கும். இவ்வாறு சமையல் என்பது ஒன்றாக இருந்தாலும் அதன் செய்பவர்களை பொருத்தும், செய்யும் முறையை பொருத்தும் அதன் சுவை மாறுபடுகிறது. அதுபோல பல ஆண்டுகள் முன்புவரை சமயலில் வடகம் போட்டு தாளிப்பார்கள். ஆனால் இப்பொழுது உள்ளவர்கள் அதனை எல்லாம் சற்றும் திரும்பி பார்ப்பது கிடையாது. வடகம் வைத்து தாளித்து குழம்பில் ஊற்றும் பொழுது எப்பொழுதும் இருக்கும் சுவையை விட மிகவும் அருமையான சுவையில் நல்ல வாசத்துடன் இருக்கும். இந்த வடத்கதை மிகவும் ஈஸியாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

manathakkali

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – ஒரு கிலோ, பூண்டு – 100 கிராம், உளுத்தம் பருப்பு – 100 கிராம், கடுகு – 50 கிராம், சீரகம் 50 கிராம், வெந்தயம் 2 ஸ்பூன், சோம்பு – 2 ஸ்பூன், பெருங்காய தூள் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – இரண்டு கைப்பிடி, விளக்கெண்ணெய் – 50 கிராம், மஞ்சள் தூள் – 2 ஸ்பூன், உப்பு – 3 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி விட வேண்டும் அதன் பிறகு இவற்றை அகலமான இரண்டு தட்டுகளில் பிரித்து வைத்துக்கொண்டு, எட்டு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

chinna-vengayam

பின்னர் இவற்றுடன் 20 பல் பூண்டை தோலுடன் தட்டி சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் போன்றவற்றையும் சேர்த்து நன்றாக பிசறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் 2 கைபிடி கருவேப்பிலையை லேசாக கைகளால் பிய்த்து இதனுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.

- Advertisement -

பிறகு 50 கிராம் விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து எண்ணெயையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இரவு முழுவதும் அதனை ஒரு மூடி போட்டு அப்படியே வைத்துவிடவேண்டும். பிறகு மறுநாள் காலை மீதமுள்ள எண்ணையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

castro-oil

என்னையை கையில் லேசாக தொட்டுக்கொண்டு கிளறி வைத்துள்ள மசாலாக்களை கையில் கொஞ்சமாக எடுத்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எத்தனை உருண்டைகள் வருகிறதோ அத்தனை உருண்டைகள் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். இவ்வாறு இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து அதன் பின்னர் ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

onion-vadagam

எந்த குழம்பு செய்வதாக இருந்தாலும் இறுதியாக அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி இந்த வடகத்தில் இருந்து சிறிதளவு எடுத்து எண்ணையில் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றினால் போதும். இதன் வாசனைக்கு வீட்டில் உள்ள அனைவரின் கவனமும் உங்கள் பக்கம் திரும்பிவிடும்.

- Advertisement -