எளிமையாக எல்லா கடனையும் அடைக்க தீபம்

mahalashmi
- Advertisement -

இன்று வாழ்க்கையில் இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலை எதனால் வந்தது என்று, சற்று பொறுமையாக சிந்தித்தால் நமக்கே புரியும். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு வாங்கிய கடன். எல்லா பொருட்களும் இப்போது இஎம்ஐயில் கிடைக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, கையில் பணம் இல்லாமல் பொருட்களை வாங்கி குவிக்கின்றோம்.

வாங்கிய பொருட்களுக்கு உண்டான கடனை அடைக்கும் போது தான், கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. என்ன செய்வது. இஎம்ஐ என்ற பெயரில் கடன் நம்மை சூழ்ந்து விட்டது. கைமாத்துக்காக கடன் வாங்கினால் மட்டும் தவறு கிடையாது. இ எம் ஐ யில் பொருள் வாங்கினாலும் அது தவறுதான். அதை நம்முடைய மக்கள் என்று புரிந்து கொள்கிறார்களோ அன்று தான் அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

- Advertisement -

கடன் வாங்கி சொந்த வீடு வாங்கலாம் தவறு கிடையாது. அதற்காக நம்முடைய துதிக்கு மீறி கடன் வாங்கி சொந்த வீடு கட்டுவது ரொம்ப ரொம்ப தவறு. நம்முடைய ஆயுள் முழுவதும் மாதம் இஎம்ஐ கட்டியே வாழ்க்கை முடிந்து விடும். வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பதற்குள் வயது போயிருக்கும். சொந்த வீடு கட்டி என்ன பலன்.

ஆகவே எந்த ஒரு கடனையும் வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். நாங்கள் சிந்திக்காமல் கடன் வாங்கி விட்டோம். இப்போது இஎம்ஐ பிரச்சனையில் சிக்கி இருக்கிறோம். என்ன செய்வது. உங்களுக்கு விமோசனம் அளிக்க இதோ ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிமையாக வழிபாட்டு முறை.

- Advertisement -

இ எம் ஐ தொல்லையில் இருந்து விடுபட வழிபாடு

நீங்க எந்த தேதியில் கடன் வாங்கினீங்க அப்படின்னு டாகுமெண்ட் எடுத்து பாருங்க. அந்த தேதியில் இந்த விளக்கை ஏற்றுவது சிறப்பான பலனை தரும். மாதத்தில் ஒரு நாள் அந்த தேதியில் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த விளக்கை ஏற்றி வரவும். பிள்ளையார் கோவில், அம்மன் கோவில், முருகன் கோவில், சிவன் கோவில் எந்த கோவிலில் வேண்டும் என்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம்.

இலுப்பெண்ணெய் வேப்பெண்ணெய் இரண்டையும் சம அளவுகளில் வாங்கி கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மண் அகல் விளக்கில் தயார் செய்து வைத்திருக்கும் இந்த எண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு அந்த திரியின் மீது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து இந்த விளக்கை மேற்கு நோக்கியவாறு வைக்கவும். தீபச்சுடர் மேற்கு திசை நோக்கி பார்த்து எரிய வேண்டும்.

- Advertisement -

இந்த விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இஎம்ஐ பிரச்சனையில் இருந்து வெளிவர வேண்டும் என்ற வேண்டுதலை மட்டும் அந்த கோவிலில் வைக்கவும். கோவிலை 11 முறை வலம் வந்துவிட்டு நமஸ்காரம் செய்து கொண்டு, வீடு திரும்பவும். மாதத்தில் ஒரு நாள் தொடர்ந்து இந்த விளக்கை ஏற்றி வந்தால் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் இஎம்ஐ பிரச்சனை சீக்கிரம் முடியும்.

இதையும் படிக்கலாமே: பாவம் தீர்க்கும் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி விரதம்

இ எம் ஐ சீக்கிரம் முடிவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், அந்த இஎம்ஐ கட்டுவதற்கு உண்டான சிரமங்களை அந்த கடவுள் உங்களுக்கு கொடுக்க மாட்டார். இஎம்ஐ கட்ட தேவையான வருமானத்தை உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பார். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய இஎம்ஐ பிரச்சனைக்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -