எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர்கள் | Ettuthogai noolgal names in Tamil
எட்டுத்தொகை நூல்கள் யாவை? என்கிற கேள்வியை பள்ளியில் தமிழ் பாட வினாத்தாளில் பலரும் எதிர்கொண்டு இருப்பார்கள். இந்த எட்டுத்தொகை நூல்கள் என்றால் என்ன? அந்த எட்டுத்தொகை நூல்களை இயற்றியவர்கள் யார்? எட்டுத்தொகை நூல்கள் பெயர்கள் என்ன? (Ettuthogai noolgal peyargal) என்பன உட்பட பல்வேறு தகவல்களை இங்கு நாம் தெரிந்துகொள்ளலாம்.
எட்டுத்தொகை நூல்கள்: சங்ககால இலக்கிய நூல்களில் எட்டுத்தொகை நூல்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த நூல்களாக கருதப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் என்பது எட்டு நூல்கள் அடங்கிய தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் அழைக்கின்றனர். வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி எட்டுத்தொகை நூல்கள் கி.பி 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை”
என பழம்பெரும் பாடலொன்று எட்டுத்தொகை நூல்கள் குறித்து பாடுகின்றது. எட்டுத்தொகை நூல்கள் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன (Ettuthogai noolgal peyargal). அவை என்ன என்பதை கீழே உள்ள அட்டவணையில் தெரிந்து கொள்ளலாம்.
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள் | வேறு பெயர்கள் |
---|---|
நற்றினை | நற்றிணை நானூறு, தூதின் வழிகாட்டி |
குறுந்தொகை | நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு |
பதிற்றுப்பத்து | இரும்புக் கடலை |
பரிபாடல் | ஓங்கு பரிபாடல், இசைப்பாட்டு பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல் |
கலித்தொகை | கலி, குறுங்கலி, கற்றறிந்தோர் ஏத்தும் கலி, கல்விவலார் கண்ட கலி, அகப்பாடல் இலக்கியம் |
அகநானூறு | அகம், அகப்பாட்டு நெடுந்தொகை, நெடுந்தொகை நானூறு, நெடும்பாட்டு, பெருந்தொகை நானூறு |
புறநானூறு | புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு, தமிழர் வரலாறு பெட்டகம், தமிழர் களஞ்சியம், திருக்குறளின் முன்னோடி |
ஐங்குறுநூறு | வேறு பெயர் இல்லை |
எட்டுத்தொகை நூல்களில் அகம் பற்றிய பாடல்களைக் கொண்ட நூல்கள் 5 ஆகவும், புறம் பற்றிய பாடல்களைக் கொண்ட நூல் 2 ஆகவும், அகம் + புறம் இரண்டும் கலந்த பாடல்களை கொண்ட நூல் 1 என்னும் எண்ணிக்கையில் உள்ளன.
எட்டுத்தொகை நூல்களில் 6 தொகை நூல்கள் ஆசிரியப்பா எனும் வகையில் இயற்றப்பட்டது. மேலும் கலிப்பா வகையில் கலித்தொகை எனும் நூலும், பரிபாட்டு வகையில் பரிபாடல் நூலும் இயற்றப்பட்டுள்ளது.
நூலின் தொடக்கமும், முடிவும் இல்லாமல் கிடைக்கப்பெற்ற நூல்களாக “பதிற்றுப்பத்து, பரிபாடல்” ஆகிய நூல்கள் விளங்குகின்றன. தொகை நூல்களுள் காலத்தால் முந்திய நூலாக “புறநானூறு” விளங்குகிறது.
முதல் முதலாக தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் “குறுந்தொகை” ஆகும். பரிபாடல், கலித்தொகை ஆகிய நூல்கள் மட்டுமே எண்களை குறிக்காத வகையில் பெயர்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல்கள் ஆகும்.
இந்த எட்டுத் தொகை நூல்களில் தோராயமாக 2,352 பாடல்களை 700 புலவர்கள் இயற்றி உள்ளனர். இந்த புலவர்களில் 25 பேர் அரசர்களாகவும், 30 பேர் பெண்களாகவும் இருந்துள்ளனர், பெயர் தெரியா ஆசிரியர்கள் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை மொத்தம் 102 ஆக உள்ளன.
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்கள் / Ettuthogai noolgal asiriyargal in Tamil
எட்டுத்தொகை நூல்கள் | பாடல் எண்ணிக்கை | நூல் வகை | எட்டுத்தொகை நூல்கள் தொகுத்தவர் | நூல் தொகுக்க செய்தவர் | கடவுள் வாழ்த்து பாடியவர் | தெய்வம் |
---|---|---|---|---|---|---|
நற்றிணை | 400 | அகம் | பெயர் தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | திருமால் |
குறுந்தொகை | 400 | அகம் | பூரிக்கோ பூரிக்கோ | பெயர் தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | முருகன் |
ஐங்குறுநூறு | 500 | அகம் | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
பதிற்றுப்பத்து | 100 | புறம் | பெயர் தெரியவில்லை | பெயர் தெரியவில்லை | பெயர் தெரியவில்லை | |
பரிபாடல் | 70 | அகம் + புறம் | பெயர் தெரியவில்லை | பெயர் தெரியவில்லை | பெயர் தெரியவில்லை | |
கலித்தொகை | 150 | அகம் | நல்லந்துவனார் | பெயர் தெரியவில்லை | நல்லந்துவனார் | சிவன் |
அகநானூறு | 400 | அகம் | உத்திர கண்ணனார் | பாண்டியன் உக்கிரப் பெருவழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
புறநானூறு | 400 | புறம் | பெயர் தெரியவில்லை | பெயர் தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |