ஏமாந்த பணம் நகை திரும்ப பெற

hand cash fire
- Advertisement -

வாழ்க்கையிலே மிகப் பெரிய ஏமாற்றங்களில் நாம் நம்பியவர்களே நமக்கு துரோகத்தை செய்வது தான். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் இதைத் தான் செய்கிறார்கள். ஒருவரிடம் அவசர தேவைக்கு என்று பணமும் நகையோ வாங்கி செலவழித்த பிறகு தங்களுடைய தேவை சரியானதும் கொடுத்தவர்களை மறந்து விடுவதும் வாங்கிய பொருளை கொடுக்காமல் ஏமாற்றுவதும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

பணமோ நகையோ கொடுத்தவரின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதை வாங்கியவர் நிச்சயமாக அவருடைய உறவினரோ நண்பராகத் தான் இருப்பார்கள். அவசரத்துக்கு உதவியரின் நிலைமை பரிதாபத்துக்குரியதாக மாறி விடும். இத்தகைய சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது வாங்கியவர்களே திரும்பப் பொருளை தருவார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்த பரிகாரத்தை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற

எந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம் தவறில்லை. ஆனால் பூஜை அறையில் செய்யுங்கள். பூஜை அறை தனியாக இல்லாதவர்கள் சுவாமி படங்கள் முன் செய்யுங்கள். இதற்கு ஒரு சிறிய மண்சட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சை கற்பூரத்தை போட்டு எரித்து விடுங்கள்.

இதற்கு மண்சட்டியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் வேறு எதையும் பயன்படுத்தாதீர்கள். இப்பொழுது மண்சட்டியில் பச்சைக் கற்பூரம் எரிந்து கரி படிந்து இருக்கும். அந்த கரியை உங்கள் மோதிர விரலால் தொட்டு எடுத்து ஒரு வெள்ளை நிறத்தாளில் நீங்கள் யாரிடம் பணம் நகை கொடுத்து ஏமாந்தீர்களோ அவர்களின் பெயரை எழுதுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக 10 மல்லி விதையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதை வலது கையில் வைத்து இறுக்கமாக மூடி யாரிடம் பணம் தகை கொடுத்தீர்களோ அவர்களின் பெயரைச் சொல்லி ஏமார்ந்த தொகை சீக்கிரத்தில் திருப்ப கிடைக்க வேண்டும் என்பவையெல்லாம் சொல்லி அதன் பிறகு இந்த மல்லி விதையை ஏற்கனவே எரித்த சட்டியில் போட்டு விடுங்கள்.

இத்துடன் நீங்கள் பெயர் எழுதிய வெள்ளை நிறத்தாளையும் சேர்த்து மறுபடியும் பச்சை கற்பூரத்தை சேர்த்து நன்றாக எரித்து விடுங்கள். இது முழுவதுமாக ஏரிய வேண்டும். எரிவதற்கு பச்சை கற்பூரத்தை மட்டும் தான் போட வேண்டும். அதுவும் ஒரு முறை தான் போட வேண்டும். ஆகையால் முதலே பச்சை கற்பூரத்தை அதிகமாக போட்டு எரித்து விடுங்கள். இவை நன்றாக எரிந்த பிறகு கால் படாத இடத்தில் கொண்டு போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நீங்கள் பணத்தை கொடுத்தவருக்கு எந்த பாதிப்பும் வராது. மாறாக உங்களை ஏமாற்றி விட்டோமே என்ற எண்ணம் அவருக்குத் தோன்றி அதனால் உங்களுடைய பணத்தையும் நகையோ திருப்பித் தருவதற்கான யோசனை அவருக்கு வரும். ஆகையால் அவரே திரும்ப வந்து உங்களுடைய பொருள்களை திரும்ப ஒப்படைப்பார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தங்க நகை சேர பரிகாரம்

பாடுபட்டு சம்பாதித்த பணமோ பொருளோ மற்றவரிடம் கொடுத்து ஏமாந்து நிற்கும் போது அதன் வலியை ஏமாந்தவர் மட்டுமே உணர முடியும். இந்த பரிகாரத்தின் மூலம் இழந்தவை அனைத்தையும் திரும்ப பெறலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -