இந்த ரகசியம் மட்டும் உங்களுக்கு தெரிந்தால்! 1 கட்டு முருங்கை கீரையை ஒரே நிமிடத்தில் கூட ஆய்ந்து விடலாமே!

- Advertisement -

முருங்கைக் கீரையில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமானது. அதிலிருக்கும் 18 அமினோ அமிலங்கள், முட்டை, பால், இறைச்சிக்கு இணையான புரதம் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடியது ஆகும். அடிக்கடி முருங்கை கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் கோல் ஊன்றி நடக்க வேண்டிய அவசியமே இருக்காது. ‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ என்பது பழமொழி ஆகும். இந்தப் பழமொழிக்கு பலரும் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

Murungai keerai

இதன் உண்மையான அர்த்தம் முருங்கை மரத்தை நட்டு அதன் பயன்களை அனுபவிப்பவன் வயதான காலத்தில் கோலூன்றி நடக்காமல் வெறுங்கையோடு கைவீசி நடந்து செல்வான் என்பதை குறிப்பதற்கு தான் இவ்வாறு கூறப்பட்டது. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த முருங்கைக்கீரையை தவறாமல் அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நன்மை தரும். ஆனால் அதை உருவுவதற்கு என்னமோ பலரும் சோம்பல்தனப்பட்டு அதனை தவிர்த்து விடுகிறார்கள். ஒரு கட்டு கீரையை கூட ஒரே நிமிடத்தில் நம்மால் சுத்தம் செய்து உருவி விட முடியும்! அது எப்படி செய்வது? என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

- Advertisement -

முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொந்தரவுக்கு எதிராக செயல்படும். வாழை மரத்தைப் போலவே முருங்கையும் இலை, வேர் முதல் தண்டு, பூ, காய் வரை அத்தனையுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. இருபது அமினோ அமிலங்களில் 18 வகையான அமிலம் முருங்கையில் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. மனிதனுக்கு தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே அதிகம் கிடைக்கும். ஆனால் சைவ உணவில் அவை கிடைக்க முருங்கை இலையை தவிர வேறு எதனாலும் முடியாது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த முருங்கைக்கீரையை இனியும் தவறவிடாதீர்கள். வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடுங்கள்.

Murungai keerai

முருங்கைக்கீரையில் கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் பி, பி2, சி நிறைந்து காணப்படுவதால் உடல் பலம் பெறும். நம் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்பட்டு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். முருங்கை குச்சியை சூப் வைத்து சாப்பிட்டால் இழந்த இரும்புசத்து மீண்டும் கிடைத்து இரத்த சோகையில் இருந்து வேகமாக விடுபடலாம். வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் முருங்கைக் கீரையை அவ்வளவு சுலபமாக சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் முந்தைய நாள் இரவே முருங்கைக்கீரையை கடைகளிலிருந்து ஃபிரெஷாக வாங்கி வைத்து விடுங்கள். வீட்டில் முருங்கை மரத்தை வளர்த்து வந்தாலும் முந்தைய நாள் மாலை வேளையில் முருங்கை கீரையை பறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் மஞ்சள் இலைகள், தேவையற்ற இலைகள், குப்பைகளை மட்டும் தனியே அகற்றி கொள்ளவும்.

Murungai keerai

பின்னர் ஒரு பெரிய நியூஸ் பேப்பரை விரித்து கொள்ளுங்கள். அதில் முருங்கைக் கீரையை வைத்து சுற்றிக் கொள்ளுங்கள். அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் இலைகள் தனியாகவும், குச்சிகள் தனியாகவும் இருக்கும். நீங்கள் சுலபமாக குச்சிகளை மட்டும் தனித்தனியாக எடுத்து விட்டு, கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு சுலபமான முறையில் முருங்கைக்கீரையை ஆய்வது என்பது முடியும் என்றால் ஏன் அதனை நம் ஆரோக்கியத்தின் நன்மைக்காக அடிக்கடி சமைத்து சாப்பிடக்கூடாது?

- Advertisement -