எதிரிகள் தொல்லை நீங்க எண்ணெய் பரிகாரம்

narachimmar dheepam
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவான். தோல்வி என்பதை மனிதன் மட்டும் அல்ல எந்த ஜீவ ராசியும் விரும்பாது. இந்த தோல்வி ஒருவருக்கு ஏற்பட பல வகையான காரணங்கள் உண்டு. கிரக சூழ்நிலை, பிறரின் சூழ்ச்சி, கண் திருஷ்டி, எதிரி தொல்லை, ஆரோக்கிய கோளாறு வீட்டில் இருக்கக் கூடிய தேவையற்ற எதிர்மறை எண்ணம் போன்றவை.

இந்த தோல்வி பயமானது ஒருவர் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் அவர்களால் வெற்றி என்ற இலக்கை அடையவே முடியாது. அப்படி தோல்வி பயம் இன்றி எதிரிகள் தொல்லை இன்றி நீங்கள் நினைத்த இலக்கை அடைய கூடிய தாந்த்ரீக பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

எதிரிகள் தொல்லை எதிர்மறை ஆற்றல் நீங்க பரிகாரம்

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும் வியாழக்கிழமையில் ராகு காலம் எமகண்டம் தவிர்த்து மற்ற நேரங்களில் இதை செய்யலாம். இதற்கு நீங்கள் கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய் இரண்டையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் இந்த இரண்டு எண்ணெயும் ஒன்றாக ஊற்றுங்கள்.

அதிகமாக ஊற்ற வேண்டாம் ஒரு ஸ்பூன் அளவு எண்ணெய் இருந்தால் போதும். இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று செய்வதால் அன்றைய தினத்துக்கு உகந்த கடவுளான குரு பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதுபோல் நீங்கள் யாரையேனும் உருவாக மானசீகமாக ஏற்று இருந்தால் அவர்களையும் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது வரவேற்பறையில் அமர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் கலந்து வைத்து எண்ணெயிலிருந்து 5 சொட்டு என்னை உங்களுடைய இடது கையில் ஊற்றி வலது கையை வைத்து மூடி கொள்ளுங்கள். அடுத்து கண்களை மூடி குருவை மனதார நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் தீய சக்தி கிட்ட எண்ணங்கள் அனைத்தும் நீங்க வேண்டும்.

உங்கள் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகள் கெட்ட சக்திகள் இவைகளும் என்னை விட்டு நீங்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பிரார்த்தனை 10 நிமிடம் வரையாவது தொடர்ந்து செய்யுங்கள். அதன் பிறகு கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவி விடுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக நீங்கள் கலந்து வைத்த அந்த எண்ணெய் வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள். ஒரு மணி நேரம் வரை வரவேற்பதில் எந்த எண்ணெய் இருக்கட்டும். அதன் பிறகு எடுத்து சாக்கடை நீரில் ஊற்றி விடுங்கள். இந்த எண்ணெய் பிறர் காலை பட்டு விடக்கூடாது கொஞ்சம் கவனமாக அப்புறப்படுத்துங்கள்.

முதலில் செய்த பரிகாரம் உங்களுக்குள் இருக்கும் தீயவை எதிர்மறை ஆற்றல் நீங்கள் யாரையேனும் உங்களுக்கே தெரியாமல் எதிரியாக பாவித்து இருந்தாலும் அந்த எண்ணங்கள் அழியும். அதே போல் உங்களை யாரேனும் எதிரியாக நினைத்து இருந்தாலும், உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கக் கூடிய அனைத்தும் விலகும்.

வரவேற்பறையில் வைத்தது வீட்டை சுற்றி இருக்கும் அனைத்து எதிர்மறை ஆற்றலும் வீட்டுக்குள் இருக்கும் தேவையற்ற ஆற்றல்களையும் வெளியேற்றி விடும். இந்த பரிகாரத்தை மூன்று வியாழக்கிழமை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்று சொல்லப்படுகிறது.

எப்போதெல்லாம் உங்களுக்கு எதிர்மறை ஆற்றல் உண்டாகுவது போல தோன்றுகிறதோ எதிரி தொல்லை இருக்கிறதோ அந்த நேரங்களில் இதை செய்யலாம். இதே முறையில் தொழில் செய்பவர்கள் தொழில் நிறுவனங்களில் வைக்கலாம். வண்டி வாகனம் ஒட்டுபவர்கள் வாகனங்களில் இப்படி வைத்து எடுத்து ஊற்றலாம்.

இதையும் படிக்கலாமே: தீராத பழி சொல் கெட்ட பெயர் நீங்க முருகன் வழிபாடு

தீய சக்திகளையும் எதிரிகளையும் தாக்குதலையும் கெட்ட எண்ணங்களையும் அகற்ற அற்புதமான ஒரு பரிகார முறையாக இது சொல்லப்படுகிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருக்கும் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -