இந்த ஒரு பொருளை தினமும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப்பட்ட இளநரையும் மறைந்து முடி வேர்க்கால்களில் இருந்தே கருமை நிறத்துடன் வளரும்.

eating grey and black hair
- Advertisement -

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடம்பில் இருக்கக்கூடிய வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சமமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பின் அவற்றால் நம் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில் தான் ஒருவருக்கு இளநரை ஏற்படுகிறது என்றால் அவர்களின் உடம்பில் பித்தம் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பித்தத்தை நாம் சரி செய்யும் பொழுது இளநரை பிரச்சினையில் இருந்து நம்மால் வெளியில் வர முடியும். அந்த பித்தத்தை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் சிறுவயதிலேயே பலருக்கு இளநரை ஏற்படுகிறது. இந்த இளநரையை மறைப்பதற்காக பல செயல்களில் ஈடுபட்டாலும் அந்த இளநரையை சரி செய்வதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக விளங்கக்கூடிய பித்தத்தை சரி செய்ய வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. எவருடைய உடம்பில் பித்தம் அதிகமாக இருக்கிறதோ அவருக்கு தான் விரைவில் நரை முடி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பித்தத்தை சரி செய்ய அற்புத ஆற்றல் கொண்ட சில பொருட்களை வைத்து தான் இன்று நாம் ஒரு ஊறுகாயை தயார் செய்யப் போகிறோம். இந்த ஊறுகாயில் தினமும் இரண்டு துண்டுகள் என்று சாப்பிட்டு வர நம் உடம்பில் இருக்கக்கூடிய பித்தத்தின் அளவை அது குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வரும்.

இதற்கு நமக்கு தேவைப்படுவது மூன்று பொருட்கள். கடுக்காய், எலுமிச்சை பழம் மற்றும் இந்துப்பு. இவை மூன்றுமே பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. கடுக்காயின் தோலை சிறு சிறு துண்டுகளாக உரித்து எடுத்து கொள்ள வேண்டும். உள்ளே இருக்கும் கொட்டையை உபயோகப்படுத்தக் கூடாது.

- Advertisement -

நாம் பிரித்து வைத்திருக்கும் கடுக்காய் தோல் ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அதற்கு தேவையான அளவு இந்து உப்பையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த கலவையை வெயிலில் காய வைக்க வேண்டும்.

வெயிலில் நன்றாக காய்ந்த பிறகு, இது உப்பு காய் போன்று இருக்கும். அதை ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 30 வயதுக்குள் இளநரையுடன் இருப்பவர்கள் இதில் இரண்டு துண்டுகள் வீதம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பித்தத்தின் அளவு குறைக்கப்பட்டு, அவர்களின் இளநரை பிரச்சினை தீர்க்கப்படும். மேலும் புதிதாக வளரக்கூடிய முடிகள் வேர்க்கால்களில் இருந்தே கருப்பு நிறத்துடன் வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சருமத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை அதி வேகமாக விரட்டி அடிக்கும் அதிமதுரம். வெறும் 10 நாள் இதை மட்டும் செய்யுங்க. கருத்து போன உங்கள் சருமமெல்லாம் அப்படியே, பால் நிறத்தில் வெள்ளையாக மாறிவிடும்.

இளம் வயதில் ஏற்படக்கூடிய நரையை முற்றிலும் தீர்க்கும் இந்த எளிமையான பொருளை உட்கொண்டு மூப்பு இன்றி என்றும் இளமையுடன் இருக்கலாம்.

- Advertisement -