கடன் தொல்லையால் தினம் தினம் அவதிப்படுபவர்கள் கையில் கட்டும் கருப்பு கயிறை இப்படி பயன்படுத்தினால், கழுத்தை நெரிக்கும் கடன் சுமையும் காணாமல் போகும்.

Black thread Cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் கடன் என்ற வார்த்தையை உச்சரிக்காத மனிதர்களே இல்லை. எல்லோருமே ஏதோ ஒரு வகையில் கடனை வாங்கி அவதிப்படுகின்றார்கள். முதலில் கடனை வாங்கவே அதிகம் யோசிக்க வேண்டும். ஒரு முறை அதை வாங்கி விட்டால் போதும் அதற்கு வட்டி என்று ஒருபுறம் ஏறிக் கொண்டே இருக்கும் இன்னொரு புறம், ஒரு முறை வாங்கி பழக்கப்படுத்திக் கொண்டால் மறுபடியும் அதை வாங்க தூண்டிக் கொண்டே தான் இருக்கும். இந்த நிலை மாறி கடன் என்னும் பிரச்சனையை அறவே ஒழிக்க இந்த கருப்பு கயிறு பரிகாரம் செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு கயிறை கைகளில் கால்களில் கட்டுவது என்பது நாம் இன்று நேற்று பின்பற்றி வந்த பழக்கம் கிடையாது. நம் முன்னோர்கள் முதலே கருப்பு கயிறை நம்முடைய உடலில் அணியும் பழக்கம் இருந்து வந்தது. கெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்கவும், நம்மிடம் உள்ள நல்ல ஆற்றல்கள் பிறரிடம் செல்லாமல் இருக்கவும் போன்ற பல விஷயங்களுக்கு இந்த கருப்பு கயிறு பயன்படுத்தி வருகிறோம். இப்போது இந்த பதிவில் கருப்பு கயிறு பயன்படுத்தி கடன் பிரச்சனை தீர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

கடன் தீர கருப்பு கயிறு:
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். ஏனென்றால் கடன் பிரச்சனை முழுவதுமாக தீர வேண்டும் என்றால் அதற்கு குருபகவானின் அனுக்கிரகம் முக்கியமாக நமக்கு தேவை எனவே இந்த பரிகாரத்தையும் வியாழக்கிழமை அன்று காலை வேளையிலே செய்து விடுங்கள்.

இந்தப் பரிகாரம் செய்வதற்கு முதல் நாளே யார் பரிகாரம் செய்து கொள்ளப் போகிறீர்களோ அதாவது அந்த வீட்டில் யார் பெயரில் கடன் இருக்கிறதோ அவர்களின் முழு நீளத்திற்கு ஒரு கருப்பு கயிறு வாங்கி கொள்ளுங்கள். அவர்கள் தலையில் வைத்தால் அந்த கருப்பு கயிறு பாதம் வரை வர வேண்டும் அப்படியே அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கருப்பு கயிறில் ஆங்காங்கே சின்ன சின்ன முடிச்சுகளாக போட்டு அதை சின்னதாக கையில் சுருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வியாழக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் உங்கள் வேலைகள் எல்லாம் முடித்த பிறகு பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு இந்த கருப்பு கயிறை கையில் வைத்துக் கொண்டு உங்கள் தலையை கிளாக் வயசில் ஏழு முறை சுற்ற வேண்டும். இந்தப் பரிகாரத்தை யார் செய்கிறார்களோ அவர்களே அவர்களுக்கு செய்து கொள்ள வேண்டும் மற்றவர் செய்யக் கூடாது.

இந்த கருப்பு கயிறை நீங்கள் ஏழு முறை சுற்றும் போதே உங்களுடைய கடன் முழுவதுமாக அடைந்து விடும் என்ற நம்பிக்கையுடன், அந்த எண்ணத்தை மனதில் ஆழமாக பதிய வைக்க வேண்டும். என்னுடைய கடன் முழுவதையும் அடைத்து விடுவேன் அடைந்து விடும் என்ற நம்பிக்கை கொண்டு சுற்றிய பிறகு அந்த கயிறை ஓடும் நீரில் விட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய சிறிது நாட்களுக்குள்ளாகவே உங்கள் கடன் அடைவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதற்கான வழிகள் உங்களுக்கு புலப்படும் பண வரவும் அதிகரிக்கும் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: குலத்தை காக்கும் குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதை செய்யுங்க குலதெய்வமே உங்களுக்கு அருள் கொடுப்பார்!

இந்த பரிகாரத்தை உங்கள் கடன் தொல்லை குறைய குறைய நீங்கள் நிறுத்தி விடலாம் அதுவரை வியாழன் அன்று இதை தொடர்ந்து செய்யுங்கள். இந்த கருப்பு கயிறு பரிகாரத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நீங்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்து கடன் இல்லாத ஒரு நிலையை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -