கடன்கள் அடைய அமாவாசை உப்பு பரிகாரம்

nila vasal uppu
- Advertisement -

அமாவாசை என்றாலே பலரும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாள் என்று மட்டுமே நினைக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் அமாவாசை நாளில் தான் பல புதிய நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள். அமாவாசையில் தொடங்கும் காரியங்கள் நல்ல விருத்தி அடையும் என்பதும் ஐதீகம். இந்த அமாவாசையும் ஒவ்வொரு நாளில் வருவதற்கும் தனியான பல சிறப்பாம்சங்கள் உண்டு.

அந்த வகையில் தீபாவளியுடன் சேர்ந்து, சுவாதி நட்சத்திரத்துடன் கூடிய இந்த அமாவாசை திதியானது பல அற்புத பலன்களை தரக்கூடியதாக உள்ளது. இந்த அமாவாசையானது இன்று 12.11.23 மதியம் 3 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை 13.11.23 மதியம் 3 மணி வரை உள்ளது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையை அமஹேமாவதி விரதம் என்ற விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்படியான அற்புதமான இந்த நாளில் நிலை வாசலில் நாம் செய்யும் இந்த ஒரு எளிய பரிகாரமானது நம்முடைய பணக்கடன், நகை கடன் அனைத்தும் தீருவதுடன் வீட்டில் பொன் பொருள் சேர்வதற்கான யோகத்தை ஏற்படுத்தி பணவரவை அதிகரிக்கச் செய்யும் என்று சொல்லப்படுகிறது. அந்த பரிகாரத்தை எப்படி எப்பொழுது செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்ப்போம்.

கடன் தீர அமாவாசை உப்பு பரிகாரம்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தக் கூடியது எனில் அது கடன் தான். அந்த கடனை அடைக்க கூடிய அற்புதமான இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவை மஞ்சள் நிறத்திலான ஒரு துணி. இது பட்டு துணியாக இருந்தால் மிகவும் சிறந்தது அல்லது சைனிங் மஞ்சள் நிற துணியை பயன்படுத்தினால் நல்லது.

- Advertisement -

இந்தத் துணியை விரித்து வைத்து இதில் கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து விடுங்கள். அதே போல் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையும் வைத்து விடுங்கள். கடன் இருப்பவர்கள் கட்டாயமாக மூன்று மிளகை வைத்து விடுங்கள். இத்துடன் உங்கள் வீட்டில் மூக்குத்தி திருகாணி போன்ற மிகச் சிறிய தங்கம் இருந்தால் அதில் வையுங்கள். இது தங்கத்தை பல மடங்கு பெருக்குவதற்கான யோகத்தை தரும்.

தங்கம் இல்லை சிறிய அளவு வெள்ளி இருக்கிறது என்றால் அதையும் வைக்கலாம். தங்கம் வெள்ளி மட்டும் இவை இரண்டும் கட்டாயம் இல்லை. ஆனால் கல் உப்பு, நாணயம், மிளகு இவை மட்டும் கட்டாயமாக வைக்க வேண்டும். இவையெல்லாம் வைத்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் முன்பாக வைத்து பண பிரச்சனை தீர மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த முடிச்சை உங்கள் நிலை வாசலின் வெளிப்புறம் நடுவில் கட்டி விடுங்கள். இந்த முடிச்சை நீங்கள் இன்றே கட்டுவதாக இருந்தால் இன்று மாலை 4 மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளாக கட்டுங்கள். நாளை திங்கட்கிழமை கட்டுவதாக இருந்தால் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டலாம். முடியாதவர்கள் காலை ஏழு மணிக்குள்ளாக இதை கட்டி விடுங்கள். அந்த நேரத்திலும் முடியாதவர்கள் மதியம் 11மணியிலிருந்து 12 மணிக்குள்ளாக இந்த முடிச்சை கட்டிவிட வேண்டும்.

இந்த முடிச்சு ஒரு மாத காலம் வரை அப்படியே இருக்கட்டும். அடுத்த மாதம் அமாவாசை அன்று இந்த முடிச்சில் உள்ள உப்பு, மிளககை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த மஞ்சள் துணியை அலசி ஆற வைத்து மீண்டும் அதில் கல் உப்பு, நாணயம், மிளகு வைத்து மறுபடியும் கட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை நம் தொடர்ந்து செய்யும் போது பணவரவு அதிகரித்து கடன் அடைவதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: சஷ்டி விரதம் எளிமையாக இருப்பது எப்படி?

இந்த பரிகாரங்கள் அனைத்துமே நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்து அதற்கான முழு முயற்சியும் எடுக்கும் போது நிச்சயம் இந்த பரிகாரங்கள் நல்ல பலனை கொடுக்கும் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -