குதிரை லாடத்தை வீட்டில் இப்படி வைத்தால் போதும். பணம் நம்மைத் தேடி ஓடி வரத்தொடங்கும். கடன் காணாமலேயே போகும்.

ladam
- Advertisement -

நிறைய பேருக்கு கடன் பிரச்சினையும் பணப் பிரச்சனையும் இன்றைய சூழ்நிலையில் இருந்துதான் வருகின்றது. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வரக்கூடிய சம்பளத்தை வைத்து வாழவும் முடியாமல், திணறிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். பணக் கஷ்டத்தால் அவதிப்பட்டு வருபவர்கள் மிக மிக சுலபமான எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். உங்களுடைய வீட்டின் அருகில் குதிரையைப் பராமரிக்கும் இடம் இருந்தால் அங்கு சென்று பேரம் பேசாமல் குதிரை காலில் அணிந்த பழைய லாடத்தை வாங்கி வர வேண்டும். புதிய குதிரை லாடத்தை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்தக் கூடாது.

ladam2

பழைய லாடத்தை வாங்கி வந்து சுத்தமான தண்ணீரில் கழுவி கோமியத்தில் ஒருமுறை அந்த லாடத்தை கழுவி, சுத்தமாகத் துடைத்து பூஜை அறைக்கு கொண்டு வரவேண்டும். இந்த லாத்தின் மேல் மஞ்சளை இழைத்துப் பூசி குங்குமப் பொட்டு வைத்து ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். மனதார குலதெய்வத்தையும் இஷ்டதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த லாடத்திற்கு தூபம் காட்டி விட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு பண கஷ்டம் வரக்கூடாது. கடன் சுமை குறைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்‌. அதன் பின்பு இந்த லாடத்தை எடுத்து நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில், நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில், U வடிவத்தில் ஆணியடித்து மாட்டிவிட வேண்டும். நிலைவாசல் மரசட்டத்தில் மாட்டக்கூடாது. நிலைவாசல் கதவில் மாட்டக்கூடாது. நிலை வாசலுக்கு மேலே இருக்கும் சுவற்றில் மாட்ட வேண்டும்.

ladam3

தினம்தோறும் இந்த லாடத்துக்கு தீபம் ஏற்றும்போது ஊதுவத்தி காண்பித்து உங்களுக்கு வாழ்க்கையில் என்ன தேவை இருக்கிறதோ அதை நினைத்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். கடன் தீர வேண்டுமா, வருமானம் அதிகரிக்க வேண்டுமா. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமா நல்ல வேலை கிடைக்க வேண்டுமா, எந்த வேண்டுதலை வேண்டுமென்றாலும் வைக்கலாம்.

- Advertisement -

உங்களுடைய வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்கள் நடக்கும். குதிரை என்பது எப்போதுமே சுறுசுறுப்பாக உழைக்கக்கூடிய ஒரு விலங்கு. ஒரு போதும் சோர்வு என்பது குதிரையிடம் வராது. நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது குதிரை. சூரியனின் வாகனமாக சொல்லப்படுவதும் இந்த குதிரை தான்.

cash

குறிப்பாக இந்த குதிரைலாடத்தை திங்கள், புதன், ஞாயிறு அன்று வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். இந்த மூன்று கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையில் பூஜை செய்து நிலை வாசலில் மாட்டினாலும் நல்லது. அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் குடிசை வீடாக இருந்தாலும் சரி, அந்த மண்ணினால் கட்டப்பட்ட வீட்டில் கூட நிலை வாசலில் மண்ணுக்குள்ளே இந்த குதிரை இலாடத்தை புதைத்து வைத்து வீடு கட்டும் வழக்கத்தை வைத்துள்ளார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அதிஅற்புதமான நேர்மறை சக்திகள் ஈர்க்கக்கூடிய இந்த குதிரை லாடத்தை மேல் சொன்ன படி உங்களுடைய வீட்டிலும் மாட்டி வையுங்கள். குதிரை போலவே உங்களுடைய வாழ்க்கை சுறுசுறுப்பாக வேகமாக ஓடும். சோம்பேறித்தனம் உங்கள் பக்கம் கூட வராது. உழைக்கத் தொடங்கி விடுவீர்கள். நிச்சயமாக பணம் உங்கள் வீட்டிற்குள் ஓடி வரும். வந்த பணம் வீன் விரையம் ஆகாது. சேமிப்பில் தங்கும். வாங்கிய கடனை அடைப்பதற்கு வழி கிடைக்கும். மேலும் கடன் வாங்காமல் இருப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -