கடன் தீர்க்கும் மருதாணிப் பூ பரிகாரம்

mahalashmi4
- Advertisement -

நிறைய பேர் கடனை வாங்கிவிட்டு அதை திருப்பித் தர முடியாமல், திருப்பித் தர வழியே இல்லாமல், ஊரை விட்டு ஓடி விடுவார்கள். அதாவது தலை நிமிர்ந்து வாழ்ந்த ஊரில் தலை குனிந்து வாழ முடியாத சூழ்நிலை இருக்கும். அந்த அளவுக்கு கடன் வாங்கி தலைமறைவானவர்களுக்கு கூட, கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும், இந்த எளிமையான பரிகாரத்தை செய்தால்.

அந்த காலத்திலேயே சித்தர்கள் நமக்கு சில சூட்சமமான பரிகாரங்களை சொல்லி வைத்துள்ளார்கள். அதில் ஒரு பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். கடன் தீர்க்கும் இந்த பரிகாரம், நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் ஆன்மீகம் சொல்லும் அந்த பரிகாரம் என்ன என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

கடன் தீர்க்கும் மருதாணி பூ

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படப்போகும் பொருள் மருதாணி பூ. மருதாணி செடியிலிருந்து ஒரு சில இலைகளோடு இந்த மருதாணி பூவையும் பறித்துக் கொள்ள வேண்டும். ஒரு பேப்பரில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீங்க. அவர்களுடைய பெயர், அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு கடன் கொடுக்க வேண்டும் அந்த தொகை, இந்த இரண்டையும் எழுதிக்கோங்க.

10 பேரிடம் கடன் வாங்கி இருந்தால், 10 நபரின் பெயரையும் ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிவிட்டு அந்த பெயருக்கு பக்கத்தில் அவரிடம் வாங்கிய கடன் தொகையை எழுதி விடுங்கள். ஒரு சின்ன டப்பா எடுத்துக்கோங்க. அது பிளாஸ்டிக் டப்பா, கண்ணாடி பாட்டில், எதுவாக இருந்தாலும் சரி, அதில் இந்த மருதாணி பூவையும் போட்டுடுங்க. எழுதி வைத்திருக்கும் சீட்டையும் போட்டுடுங்க.

- Advertisement -

லேசாக அந்த பாட்டிலை மூடிடுங்க. கொஞ்சம் காற்று வெளியே போகும் படி டப்பாவை மூடவும். இந்த டப்பாவை கையில் வைத்துக்கொண்டு பிரபஞ்சத்திடம் கேளுங்கள். என்னுடைய கடன் பிரச்சனையிலிருந்து, நான் சீக்கிரம் வெளியே வர வேண்டும். கடன் காரர்களுக்கு எல்லாம் சீக்கிரம் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, இந்த டப்பாவை ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.

வாரத்திற்கு ஒருமுறை உள்ளே இருக்கும் பழைய மருதாணி பூ இலையை மட்டும் எடுத்து விட்டு, புதுசாக மருதாணி இலை போட்டு, மீண்டும் வேண்டுதல் வைத்து, அதே இடத்தில் வைத்து விடுங்கள். தொடர்ந்து வாரம் தோறும் இதே பரிகாரத்தை செய்து வர, உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். ஏதோ ஒரு ரூபத்தில் பணம் வரும். ஏதோ ஒரு ரூபத்தில் உங்களுடைய மரியாதை காப்பாற்றப்படும்.

இதையும் படிக்கலாமே: பிறந்த நேரத்திற்கான பலன்கள்

நீங்கள் கடன் பிரச்சனை தாங்காமல், இருந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு ஓடி வந்தவர்களாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சீக்கிரமே கடன் பிரச்சனையிலிருந்து விடுபட்டு உங்க சொந்த ஊருக்கு திரும்பி தலை நிமிர்ந்து வாழக்கூடிய நேரமும் காலமும் கைக்கூடி வரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -