தீரா கடன் தொல்லை தீர ஒரே ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இந்த எளிமையான பரிகாரம் செய்தால் போதும்.

lemon cash
- Advertisement -

மனிதன் நிம்மதியாக வாழ வேண்டும் எனில் முதலில் கடன் தொல்லை இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக இருப்பதே இந்த பணமும் பணம் சார்ந்த பிரச்சனையும் தான். அது சரியாகி விட்டாலே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். அத்தகைய கடன் பிரச்சனை தீர எளிய ஒரு பரிகாரத்தை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர நாம் எத்தனை பரிகாரங்களை செய்தாலும் அத்தனையும் உடனே பலன் தருவதில்லை. இதற்கு காரணம் ஒரு மனிதன் கடனில் அவதிப்படுவது அவனுடைய ஊழ்வினை என்று சொல்லப்படுகிறது. ஆகையால் ஒவ்வொருவருக்கும் பரிகாரம் ஒவ்வொரு விதமாக வேலை செய்யும்.

- Advertisement -

இந்தப் பரிகாரமானது அனைவரும் எளிதாக செய்யக் கூடிய ஒரு பரிகாரம் தான். இதற்கான பலனும் அதிகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது கடன் பிரச்சனையை தீர்ப்பதுடன் நம் குடும்பத்தில் உள்ள தேவையில்லாத எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

கடன் தீர பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். இதை காலையில் குளிப்பதற்கு முன்பாக செய்து விடுங்கள். இதற்கு தேவை ஒரே ஒரு எலுமிச்சை பழமும் ஒரு வெள்ளை நிற துணியும் மட்டும் தான்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய வெள்ளை நிற துணியை உங்களது வலது கையில் விரித்தவாறு வைத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் எலுமிச்சை பழத்தை வையுங்கள். இதன் பிறகு இடது கை வைத்து வலது கையில் உள்ள பழத்தை மூடி கொள்ளுங்கள். இந்த பழம் புள்ளிகள் இல்லாத நல்ல பழமாக இருக்க வேண்டும்.

இப்போது உங்கள் கண்களை மூடி உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வம் என ஏதேனும் ஒரு தெய்வத்தை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் கடன் அனைத்தும் சேர்ந்து நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது போல கற்பனை செய்து, அது நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இதை மூட்டையாக கட்டி பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து விடுங்கள்.

- Advertisement -

சிறிது நேரம் கழித்து இந்த எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டு பாதியாக நறுக்கி ஒரு பாதியை உங்கள் முகம் முழுவதும் நன்றாக தேய்த்த பிறகு தலைக்கு குளித்து விடுங்கள். மீதம் இருக்கும் பாதி பழத்தை குளித்து முடித்த பிறகு தண்ணீரில் கலந்து குடித்து விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் வாரம் ஒரு முறை செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் செலவு செய்த பணம் பல மடங்காக உங்களிடம் திரும்பி வர சொல்ல வேண்டிய ரகசிய மந்திரம்.

இதைத் தொடர்ந்து செய்ய செய்ய உள்ளுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணம், வெளியில் இருக்கும் எதிர்மறையாற்றல் அனைத்தும் நீங்கும். அதோடு பண வரவிற்கான யோகமும் கடன் அடைவதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -