அறிவோம் ஆன்மீகம்: இறைவனை கையெடுத்து வணங்குவதில் இருக்கக்கூடிய அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

pray
- Advertisement -

இறைவனை நாம் கையெடுத்து வணங்குவதில் இருக்கக்கூடிய அர்த்தம் என்ன என்பதைப் பற்றியும், நாம் அறியாத ஆன்மீக ரீதியான இன்னும் சில குறிப்புகளை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆன்மீக ரீதியான எல்லா குறிப்புகளையும் ஒரேயடியாக ஒட்டுமொத்தமாக நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. ஆன்மீகம் என்பது ஒரு கடல். இருப்பினும் அன்றாடம் நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன வேலைகளுக்கான, சின்ன சின்ன வழிபாடுகளுக்கு உண்டான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொண்டு செய்தால் அதில் ஒரு மன திருப்தி கிடைக்கும் தானே. சரி பதிவுக்குள் செல்லலாம்.

சில பெயர் இறைவனை தலைக்குமேலே கையை தூக்கி வணங்குவதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பது தெரியுமா? ‘உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லை. நீ ஒருவர் மட்டும்தான் எனக்கு துணை’ என்று இறைவனின் பாதங்களை சரண் அடைவதே இந்த வழிபாடு உணர்த்துகிறது.

- Advertisement -

சில பேர் முகத்திற்கு அருகில் கைகளை வைத்துக்கொண்டு, தலைகுனிந்து சாமியை வணங்குவார்கள் அல்லவா? ‘இறைவா! உனக்கு கீழ் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகத்தையும் உலகத்தில் வாழும் ஜீவராசிகளையும் பத்திரமாக பார்த்துக்கொள்.’ இதுதான் இந்த வழிபாட்டு முறைக்கு உண்டான அர்த்தம்.

சிலபேர் நெஞ்சுக்கு நேராக தங்களுடைய கையை வைத்துக்கொண்டு கைகளிரண்டையும் குவித்து வணங்குவது வழக்கமாக இருக்கும். ‘இறைவா உன்னை நான் என் நெஞ்சுக்குள்ளே வைத்திருக்கின்றேன். நீ எப்போதும் என்னுடனே இருந்து என்னை பத்திரமாக பார்த்துக் கொள்’ என்பதற்கு உண்டான அர்த்தம் தான் இந்த வழிபாடு.

- Advertisement -

நம்மில் நிறைய பேர் சிலரை பார்த்திருப்போம். நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பார்கள். சில பேர், இப்படிப்பட்ட சிவ பக்தர்களை பார்த்து கிண்டல் கேலியும் செய்வார்கள். இவர்கள் என்ன ஞானப் பழமாக இருக்கிறார்கள். இந்த காலத்தில் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுடன் இருக்கிறார்களே! என்று கூறக் கேட்டிருப்போம். நாம் தான் பெரிய அறிவாளி போல பேசுவோம். ஆனால் இதில் நிதர்சனமான உண்மை என்ன ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா.

ருத்ராட்சமும் திருநீறும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்ல மாட்டான். அவனுக்கு சிவலோகத்தில் மட்டுமே இடம். ஐஸ்வர்யங்களை கொட்டி தரக்கூடிய ருத்ராட்சமானது நம்முடைய ஆன்மாவிற்கு பெரிய ஆனந்தத்தை தரும். ருத்ராட்சம் அணிந்து இருப்பவர் எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் அதை ஒருமுறை உச்சரித்தால், ஒரு கோடி முறை உச்சரித்த பலனை பெறுவார்கள்.

ருத்ராட்சத்தை அணிந்து விட்டு மிருத்யுஞ்சய மந்திரம் உச்சரித்தால் உங்கள் உடலில் இருக்கும் எல்லாவித பிணிகளும், அதாவது நோய்களும் விடுபட்டு விடும். ருத்ராட்சம் அணிந்து இருப்பவனுக்கு ஒருபோதும் அகால மரணமோ, துற் மரணமோ ஏற்படாது. இவ்வாறாக மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அவர்களால் சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் ருத்ராட்சத்தை அணிந்து பயனடையலாம்.

- Advertisement -