நெருங்கி பழகிய நம் நட்பு
நீண்ட காலத்தில் காதலானது..
ஆனால் நெருக்கமில்லா நம் காதல்
குறுகிய காலத்தில் உருக்குலைந்து போனது..
நட்பின் பிரிவும் காதலின் வலியும்
உன் ஒருத்தியிடம் இருந்தே
நான் வரமாய் பெற்றேன்..
இதையும் படிக்கலாமே:
பிரிந்த கரங்கள் – காதல் கவிதை
இந்த காலத்தில் பல காதல்கள் நட்பில் இருந்து தான் துவங்குகிறது. நீண்ட கால நட்பு காதலாய் மாறுவதில் தவறேதும் இல்லை. ஆனால் அந்த காதல் நிலைத்து இருக்காமல் பிரிவது தான் தவறு. நட்பாய் இருந்து காதலர்களாக மாறுபவர்களுக்குள் நிறைய புரிதல் இருக்கும். ஆனால் இந்த புரிதலை தாண்டியும் சில கருத்து வேறுபாடுகள் அரங்கேறும்.
அரங்கேறிய கருத்து வேறுபாடுகளை அவ்வப்போது கலைஅறுத்தால் நட்பாய் மாறிய காதல் கல்யாணத்தில் முடியும். இல்லையேல் இருந்த நட்பும் இல்லாமல் போகி வாழ்வே நரகம் ஆகும் எனப்து தான் உண்மை.
அம்மா கவிதை, தோழி கவிதை, காதல் கவிதைகள் என அறிய பல தமிழ் க்விதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.