கைகளை கோர்த்து நாம்
எத்தனையோ மயில்கள் நடந்துள்ளோம்..
அப்போதெல்லாம் என்னை விட்டுவிடமாட்டாயே
என்று மணிக்கு ஒருமுறை கேட்டவள் நீ..
ஆனால் இன்றோ, என்னை ஒரேயடியாக
கைகழுவி விட்டு, என் காதலின்
தூசி கூட உன்மீது படாதது போல
என்னை கடந்து செல்ல உன்னால்
எப்படி முடிகிறது..
இதையும் படிக்கலாமே:
உன்னை நேசிப்பதற்கு இதயம் – காதல் கவிதை
உலகில் உள்ள அனைத்து காதலர்களுக்கும் சில ஒற்றுமை இருப்பதுண்டு அதில் ஒன்று தான் கரங்களை பற்றிக்கொண்டு அன்பு தழுவ சில தூரம் நடந்து செல்வது. ஆனால் இந்த நடைபயணம் எவ்வளவு தூரம் நீண்டாலும் அவர்கள் உடலிலோ உள்ளத்திலோ சிறு அயர்வும் இருப்பது கிடையாது. அதற்கு கரணம் காதல் தரும் இன்பமாக இருக்கலாம்.
இது போல என்றும் நாம் கைகோர்த்து காலம் காலமாக வாழ வேண்டும் என்று தான் அனைத்து காதலர்களும் நினைப்பதுண்டு. ஆனால் சில நேரங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் கரங்கள் பிரிக்கப்படுகிறது. அதற்கு காரணம் அவர்களாகவும் இருக்கலாம் அல்லது சுற்றமாகவும் இருக்கலாம். அப்படியான சமயங்களில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வாழும் வாழ்கை என்பது உண்மையில் நரகம் தான்.
தோழி கவிதை, நட்பு கவிதைகள், காதல் கவிதைகள் என அனைத்து விதமான கவிதை தொகுப்புகளையும் படிக்க ஒரு சிறந்த பக்கம் இது.