சாம்பிராணி தூபத்தோடு இந்த 2 பொருளை சேர்த்தால், கஷ்டத்தை கொடுக்கும் கண் திருஷ்டியை விரட்டி அடித்து விடலாம்.

dhupam
- Advertisement -

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, நம்மால் மட்டும் இப்படி முன்னேற முடியவில்லையே என்று பொறாமை படக்கூடிய பொல்லாத மனிதர்கள் வாழும் உலகம் இது. இந்த உலகத்தில் நல்லபடியாக நிம்மதியாக வாழ்வது என்பது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. நம்மை சுற்றியும் நம் வீட்டை சுற்றியும் எப்போதுமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை நமக்கு நாமே போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். அதிலும் நம்மை சுற்றி இருப்பவர்களுடைய கண் திருஷ்டி, பொறாமை குணம், வயிற்று எரிச்சல், இவைகளில் இருந்து தப்பிப்பது என்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல. கொடூரமான மிருகத்தை விட, இப்படிப்பட்ட கொடுமையான கண்களுக்கு இருக்கும் சக்தி மிக மிக அதிகம். கண் திருஷ்டியிலிருந்து, எதிரி தொல்லையிலிருந்து தப்பிக்க ஒரு எளிய பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

இந்த பரிகாரத்தை வாரம் ஒரு முறை நம்முடைய வீட்டில் செய்து கொள்வது நம் குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாரத்தில் வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த தூபத்தை வீட்டில் போடலாம். இந்த தூபத்தை வீட்டில் போடுவதற்கு முன்பாக வீட்டை சுத்தபத்தமாக துடைத்து விடுங்கள். அதன் பின்பு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இறைவழிபாடு செய்து விட்டு குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து இந்த புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

- Advertisement -

கண் திருஷ்டியை விரட்ட தூபம் போடும் முறை – Kan thrishtiyai viratta dhupam podum murai
இந்த தூபத்திற்கு 2 பொருட்கள் அவசியம் தேவை. கிராம்பு பொடி, பூண்டு தோல். வீட்டில் சமையலுக்கு பூண்டை பயன்படுத்தும்போது அதனுடைய தோலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கிராம்பை மிக்ஸியில் போட்டு அரைத்தால் கிராம்பு பொடி நமக்கு கிடைத்து விடும். அல்லது கடையிலேயே கிராம்பு பொடியாக வாங்கினாலும் தவறு கிடையாது.

வழக்கம்போல சாம்பிராணி தூபம் போட நெருப்பு மூட்டுவோம் அல்லவா. அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியை போட்டுவிட்டு, கூடவே 1 ஸ்பூன் கிராம்பு பொடி, சிறிதளவு பூண்டு தோலை போட்டு விட்டால், அதிலிருந்து புகை வரும். இந்த புகையை வீடு முழுவதும் மூளை முடுக்குகளில் எல்லாம் காண்பிக்க வேண்டும். வரவேற்பறை, படிக்கையறை சமையலறை என்று எல்லா இடத்திலும் இந்த புகையை காண்பியுங்கள். பூஜை அறையுடன் சேர்த்து தான்.

- Advertisement -

இந்தப் புகை உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை கண் திருஷ்டியை அழித்து விடும். பொறாமை எண்ணத்தோடு யாராவது வந்து உங்களுடைய வீட்டின் மேல் கண் வைத்திருந்தாலும், வீட்டில் இருக்கக் கூடிய சந்தோஷத்தை பார்த்து பொறாமை பட்டிருந்தாலும், அந்த கெட்ட ஆற்றலை அழிக்க கூடிய சக்தியும் இந்த இரண்டு பொருட்களுக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: உங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் சதியை முறியடிக்க, இந்தப் பொருளை நனைத்து ஏரிய விடுங்கள் போதும். இதன் பிறகு எதிரிகள் என்ற வார்த்தை கூட நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

எல்லா மனிதர்களையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த குறிப்பு கிடையாது. இருப்பினும் நாம் நல்லாவே இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து செல்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அல்லது இவர்கள் வாழ்க்கையை எப்படித்தான் நடத்துகிறார்கள் என்று நோட்டமிட்டு செல்பவர்களும் நிச்சயமாக வீட்டிற்குள் வருவார்கள். இப்படிப்பட்ட பொறாமை குணங்கள் எல்லாம் சேர்ந்துதான் நமக்கு கஷ்டத்தை கொடுக்கின்றது. அதிலிருந்து தப்பிக்க ஆன்மீகத்தில் சொல்லி இருக்கக்கூடிய எளிமையான குறிப்பு தான் இது. பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -