கணவனும் மனைவியும் ஒருவர் சொல்வதை மற்றொருவர் புரிந்து கொண்டு, சண்டை இல்லாமல் வாழ, தினமும் இந்த பொட்டை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.

fight
- Advertisement -

கணவன் மனைவி மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும், மனைவி கணவர் மீது பாசமாக இருக்க வேண்டும் என்றாலும் ஒரு வசிய தன்மை நிச்சயம் தேவைப்படும். வசியம் என்றால் எல்லோரும் தவறாக அர்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள். வசியம் என்பது ஒரு நல்லதை குறிக்கக்கூடிய வார்த்தைதான். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்க, வாக்குவாதம் குறைய, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள ஒரு சின்ன பரிகாரம் தான் இது. கணவர் பெயரைச் சொல்லி மனைவி இதை நெற்றியில் இட்டுக் கொண்டால், மனைவி சொல்வதை எல்லாம் கணவர் கேட்பார். மனைவியின் பெயரைச் சொல்லி கணவர் இதை நெற்றியில் இட்டுக் கொண்டால், மனைவி கணவர் பேச்சை கேட்டு நடப்பார்கள். இதற்கு என்ன அர்த்தம். ஒருவரை ஒருவர் மயக்கி வைத்துக் கொள்வது என்பது கிடையாது. இருவருக்கு இடையே இருக்கக்கூடிய அன்யூனியம் அதிகரிக்கும். புரிதல் அதிகரிக்கும். அவ்வளவுதான். இதைத்தான் வசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி நாம் சொல்கின்றோம்.

அதற்காக கணவனும் மனைவியும் இந்த பொட்டை நெற்றியில் இட்டுக்கொண்டு வாழ்க்கை துணையை ஆட்டி படைக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கக் கூடாது. நல்லதுக்காக மட்டும்தான் இந்த பரிகாரம் பயன்படும். சொல்பேச்சு கேட்காமல் அடங்காமல், வாழ்க்கையில் தடம் மாறிச் செல்லக்கூடிய வாழ்க்கை துணையை சரி செய்வதற்காகவே இந்த பரிகாரம். தவறான எண்ணத்தோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் அது பலிக்காது. நல்லெண்ணத்தோடு பரிகாரத்தை செய்பவர்களுக்கு கை மேல் பலன் கூடிய சீக்கிரத்திலேயே கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் புனுகு. நாட்டு மருந்து கடைகளில் விற்கும். ரொம்பவும் சுத்தமான புனுக்கு மிக மிக விலை உயர்ந்தது. உங்கள் வசதிக்கு ஏற்ப தரமான புனுகாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். அல்லது மற்ற இடங்களில் வைத்துக் கொள்ளலாம். சுத்தமான குங்குமப்பூ கிடைத்தால் அந்த புனுகு டப்பாவில் இரண்டு குங்கும பூவை போட்டுக் கொள்ளுங்கள். குங்குமப்பூ கிடைக்கவில்லை என்றால் வெறும் புனுகே போதும்.

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, மனைவி நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்வாள் அல்லவா. அந்த பொட்டை இட்டுக் கொள்வதற்கு முன்பு வெறும் நெற்றியில் இந்த புனுகை தொட்டு இட்டுக் கொள்ள வேண்டும். கணவர் என் சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று சொல்லி குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி நெற்றியில் அந்த புனுகை இட்டுக் கொண்டு, அதன் மேல் குங்குமப்பொட்டு இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போலத்தான் கணவர் குளித்து முடித்துவிட்டு மனைவி என் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மனைவியின் பெயரைச் சொல்லி குலதெய்வத்தை நினைத்து அந்த புனுகை தொட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு அதன் மேலே விபூதி, சந்தனம் எதை வேண்டுமென்றால் இட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

தினமும் இதை செய்து வரும் போது உங்களுடைய வாழ்க்கையில் சில நல்ல மாற்றம் நடக்கும். அதை நீங்களே உணர்ந்து பார்க்கலாம். கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை குறையும். சந்தேகம் இருந்தால் அதுவும் குறையும். நல்ல அன்யூனியம் ஏற்படும். குடும்பம் சந்தோஷமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதுக்காகவே மட்டும் பரிகாரம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை மீண்டும் நினைவு கூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -