பூர்வ ஜென்ம கர்மா, கெட்ட கர்மாக்கள் குறைய ஒரு கைப்பிடி கருப்பு உளுந்தை இதில் போட்டு விடுங்கள். நீங்கள் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் கரைந்து போகக் கூடிய அற்புத எளிய பரிகாரம்.

- Advertisement -

இப்போது நாம் வாழக் கூடிய இந்த வாழ்வில் அனுபவிக்கும் ஒவ்வொரு நன்மை தீமையும் நம்முடைய கர்மாக்களை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய கர்மாக்கள் தீயவினைகள் இல்லாது இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து முன்னேறி செல்வோம். நம்முடைய கர்மாக்களில் தீய பலன்கள் அதிகமாக இருப்பின் எந்த ஒரு செயலையும் நம்மால் சரிவர செய்ய முடியாது. அதற்கான முழுபலனும் நமக்கு கிடைக்காது. இப்படியான கர்மாக்கள் சரியாக ஆன்மீகம் ஒரு எளிய பரிகாரத்தை நமக்காக தந்திருக்கிறது அது என்னவென்று இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

கர்மா குறைய செய்ய வேண்டிய பரிகாரம்
ஒவ்வொரு மனிதனும் யோசிக்க கூடிய ஒரு விஷயம் நாம் மட்டும் துன்பப்படுகிறோம் மற்றவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்றும், நாம் யாருக்கும் எந்த துன்பமும் தருவதில்லை இருந்தாலும் நமக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என்ற இந்த கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கத் தான் செய்கிறது. இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு துன்பமும் இன்பமும் நம்முடைய கர்மாக்களை பொறுத்து தான் அமையும். கர்ம வினை குறைய குறைய தான் நம்முடைய துன்பங்களும் துயரங்களும் குறையும். எனவே முதலில் நம் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்றால் நம்முடைய கர்மாக்களை சரி செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்வதற்கு கருப்பு நிறத்திலான ஒரு கைக்குட்டை அளவில் உள்ள துணியை வாங்கி கொள்ளுங்கள் அதே போல் கொஞ்சம் கருப்பு உளுந்தையும் வாங்கி கொள்ளுங்கள். இது இரண்டையும் பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பூஜையறைக்கு சென்று விடுங்கள். அங்கு சிவபெருமானுடைய படத்தினை வைத்து அதற்கு முன்பாக இந்த கருப்பு துணியை விரித்து வைத்து விடுங்கள். அடுத்ததாக நீங்கள் வாங்கி வைத்திருக்கும் கருப்பு உளுந்து உளுந்து ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து சிவபெருமானின் மனதார நினைத்து வேண்டிக் கொண்டு உங்களின் கரும வினைகள் அனைத்தும் நீங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு உங்களுக்கு என்ன தேவையோ அந்த வேண்டுதலையும் வைத்து அந்த உளுந்தை கருப்பு துணியில் வைத்து விடுங்கள்.

இது போல தொடர்ந்து 11 நாட்கள் செய்ய வேண்டும். பெண்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது அவர்களுக்கான மாதிரி விளக்கு காலம் முடிந்த பிறகு தொடங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த பரிகாரத்தை இடையில் நிறுத்தக் கூடாது. அதே போல் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த பரிகாரத்தை செய்த பிறகு தான் நீங்கள் அடுத்த வேலையை செய்ய வேண்டும்.

- Advertisement -

11 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு இந்த கருப்பு உளுந்தை அந்த கருப்பு துணியில் மூட்டையாக கட்டிக் கொண்டு அருகில் இருக்கும் சிவலாயத்தில் தானமாக கொடுத்து விடுங்கள். ஒரு வேளை உங்களால் இப்படி தானமாக கொடுக்க முடியவில்லை என்றால் இந்த கருப்பு உளுந்தை ஏதாவது ஒரு வகையில் சமைத்து அதை தானமாக பிறருக்கு தானமாக கொடுக்க வேண்டும் நீங்கள் இதை சாப்பிடக் கூடாது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையோடு வந்திருக்கும் இந்த அமாவாசை நாளில் மகாலட்சுமி தாயாரின் அருள் பொருந்திய இந்த பொருளை உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள். பொன் பொருள் அனைத்தும் உங்க வாசலை தேடி வந்து கொண்டே இருக்கும்.

சமைத்து தானமாக கொடுக்கும் போது இந்த கருப்பு துணியை ஓடும் நீரில் விட்டு விடலாம். இந்த பரிகாரத்தை முழு மனதோடும், நம்பிக்கையோடும் உங்கள் கர்மாக்கள் தீர வேண்டும் என்ற எண்ணத்தோடும் எம்பெருமான் ஈஸ்வரனை சரணடைந்து செய்து பாருங்கள். நீங்கள் தெரியாமல் செய்து பிழைகள் கூட மன்னிக்கப்பட்டு உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறும்.

- Advertisement -