செல்வ வளத்தைக் கொட்டிக் கொடுக்கும் குபேர தானியம். கழுத்தை நெறிக்கும் கடனை கூட கரைக்கக் கூடிய சக்தி இந்த கருப்பு பொருளுக்கு உண்டு.

lashmikuberar
- Advertisement -

கையை நீட்டி கடன் வாங்கும் போது நமக்கு அதில் இருக்கக்கூடிய பிரச்சனை தெரிவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு நம்முடைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கடனை வாங்கி விடுகின்றோம். ஆனால் அந்த கடனுக்கான வட்டியை கட்டும் போதும், கடனுக்கான அசல் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்ற சூழ்நிலை வரும்போது தான், நம்முடைய கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. சில பேர் அசல் தொகை அளவிற்கு வட்டியை கட்டி இருப்பார்கள். ஆனால் அசல் தொகையை கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும். இப்படி கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்களுக்கு ஒரு சுலபமான தீர்வினை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Karunjeeragam benefits in Tamil

குபேரருக்கு உரிய தானியமாக சொல்லப்படுகின்ற ஒரு பொருள் தான் கருஞ்சீரகம். கருஞ்சீரகம் கடனை அடைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. கருஞ்சீரகத்தை வைத்து ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். வீட்டில் செல்வ கடாட்சம் நிலைத்திருக்க வேண்டும் என்றாலும், கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றாலும் தொழில் செய்யும் இடத்தில் அதிகப்படியான லாபம் வர வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

- Advertisement -

சிறிதளவு கருஞ்சீரகத்தை கடையிலிருந்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பூஜை அறையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். புதியதாக இருக்கக்கூடிய வெள்ளை காட்டன் துணி சிறிதளவு தேவைப்படும். வெள்ளை நிற நூல் தேவை. ஒரு ரூபாய் நாணயம். பூஜை அறையில் அமர்ந்து வெள்ளை நிற காட்டன் துணியில் 1 ஸ்பூன் கருஞ்சீரகத்தை வைத்து, 1 ரூபாய் நாணயத்தை கருஞ்சீரகத்தின் மேல் வைத்து, ஒரு வெள்ளை நூலை போட்டு, இதனை முடிச்சு போல கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தீபம் ஒன்றை ஏற்றி வைத்து விட வேண்டும்.

guberar2

பூஜை அறையில் அமர்ந்து மனதார உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்தபடியாக குபேரரையும் லட்சுமியையும் மனதார நினைத்து இந்த முடிச்சை எடுத்து உங்களுடைய பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். ஒரு வருடத்திற்கு உங்களுடைய வீட்டு பணப்பெட்டியில் இந்த முடிச்சு இருக்கட்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று செய்தால் நாளை உங்களுடைய கடன் அழிந்துவிடும் என்பது அர்த்தம் கிடையாது. முழு நம்பிக்கையை மூலதனமாக வைத்து இந்த முடிச்சை கட்டி பணப்பெட்டியில் வைத்த நாள் முதல், ஒரு வருடம் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். கடனை அடைப்பதற்கு முழுமூச்சாக உங்கள் முயற்சிகளை செய்து கொண்டே வாருங்கள். ஒரு வருடம் கழித்து பலனை உங்களாலேயே நிச்சயம் உணர முடியும்.

vellai-mudichu

ஒருவேளை உங்களுக்கு வியாபாரத்தில் வீழ்ச்சி. நீங்கள் வைத்திருக்கும் கடையில் வியாபாரம் சரியாக நடக்கவில்லை என்றால், வீட்டிலேயே பூஜை அறையில் இப்படி ஒரு சிறிய முடிச்சினை தயார் செய்து, இந்த முடிச்சை கொண்டுபோய் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் கிடைப்பதை நிச்சயமாக உணர முடியும். ஒரு வருடம் கழித்து பழைய முடிச்சை எடுத்து ஓடும் தண்ணீரில் விட்டு விட்டு மீண்டும் புதிய முடிச்சை வைத்துக் கொள்ளலாம். சுலபமான பரிகாரம் தான். ஆனால் சக்தி வாய்ந்த பரிகாரம் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -