கர்வத்தோடு கண்ணீர் துளிகள் – காதல் கவிதை

Love kavithai
- Advertisement -

உன் அன்பை அறியாமல்
உன்னை தவிக்க விட்டேன்
என்று கண்ணீர் சிந்தவா..
இல்லை உன் பேரழகை கண்டும்
மயங்காமல் உன்னை ஒத்துக்கிட்டேன்
என்று கர்வம் கொள்ளவா..
எது எப்படி இருந்தாலும்
பேரிழப்பு என்னவோ எனக்கு தான்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே:
என்னுள் எப்படி நுழைந்தாய் – காதல் கவிதை

- Advertisement -

காதலிக்கும் பலர், சண்டை இடும் சமயத்தில் அவர்கள் பொதுவாக கூறும் ஒரு வார்த்தை இனி என்னிடம் பேசாதே நாம் பிரிந்துவிடலாம் என்பதே. ஆனால் அப்படி பேசிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளே அவர்களின் மனமானது பிரிவை உணர்ந்து தவிக்க ஆரமிக்கும். அலைபேசியில் அழைப்பு வராதா என்று மனம் ஏங்கும். அது தான் காதலின் மாயம்.

இதில் சோகம் என்னவென்றால், மனமானது ஏங்கி தவிக்கும் வேலையில் அலைபேசியில் அழைப்பு வந்தாலும் மீண்டும் சண்டை தான் துவங்கும். ஆனால் ஒரு வழியாக ஒரு விதமான புரிதலின் காரணமாகவும், விட்டு கொடுத்தலாலும் இருவரும் சில மணி நேரங்களில் ஒன்று சேர்ந்து விடுவார். அது தான் காதல் செய்யும் அதிசயம்.

Love Kavithai Image
Love Kavithai

அன்னை பற்றிய கவிதைகள், அண்ணன் தம்பி கவிதை, காதல் கவிதைகள் என பல அழகிய தமிழ் கவிதைகளை நீங்கள் இங்கு படிக்கலாம்.

- Advertisement -