கஷ்டம் தீர பசு நெய் தானம் செய்யும் முறை

shivan
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில், இந்த உலகத்தில் தாய்ப்பாலில் மட்டும்தான் கலப்படம் இல்லாமல் இருக்கிறது. மற்றபடி எல்லா பொருள்களிலும் கலப்படம் கலந்து விட்டது. இப்படி கலப்படம் நிறைந்த பொருட்களை இறைவனுக்கு நாம் தானம் செய்வதன் மூலம் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்று முழுமையாக சொல்ல முடியாது.

கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் பார்க்காமல், கலப்படம் இல்லாத இந்த ஒரு பொருளை கோவிலுக்கு வாங்கி தானம் கொடுங்க. நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். யாரும் வாழ்க்கையில் செல்ல முடியாத உயரத்துக்கு நீங்க செல்வீர்கள். அது என்ன பொருள் அதை எப்படி வாங்குவது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

வாழ்வில் முன்னேற கோவிலுக்கு செய்ய வேண்டிய தானம்.

பசு நெய். இதை கலப்படம் இல்லாமல் எப்படி வாங்குவது. பசு மாடு வைத்திருப்பவர்களிடம் சொல்லி, இது கோவிலுக்காக தானம் கொடுக்கப் போகும் பொருள். சுத்தமான பசும்பாலில் இருந்து நெய் எடுத்து கொடுக்கவும் என்று கேட்டால் சுத்தமான பசு நெய் உங்களுக்கு கிடைக்கும். கலப்படம் இல்லாத நெய் உங்களுக்கு கிடைக்கும். இது கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கும்.

முடிந்தவர்கள் இப்படி ஒரு பசு நெய் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த நெய்யை உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவில் அர்ச்சகர் இடம், சொல்லிக் கொடுக்க வேண்டும். இது சுத்தமான பசு நெய். கர்ப்பகிரகத்தில் இருக்கும் இறைவனுக்கு முன்பாக ஒரு மண் அகல் விளக்கில் இந்த நெய் ஊற்றி தினமும் விளக்கு ஏற்றலாம் என்று சொல்லிக் கொடுத்தால், இந்த நெய்யை அவர்கள் தினந்தோறும் கர்ப்ப கிரகத்திற்கு மட்டும் விளக்கு ஏற்ற பயன்படுத்தி கொள்வார்கள்.

- Advertisement -

இதிலிருந்து எவ்வளவு புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத பிரச்சினையில் சிக்கி இருப்பவர்கள் ஒரு 1/4 கிலோ இப்படி சுத்தமான பசு நெய் வாங்கி கோவில் கர்ப்ப கிரகத்தில் விளக்கு ஏற்ற தானம் செய்து தான் பாருங்களேன். உங்களுடைய அந்த கஷ்டம் தரும் பிரச்சனை எப்படி காணாமல் போனது என்று தெரியாது.

இருந்த இடம் தெரியாமல் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, ஒரு வழியை அந்த இறைவன் காட்டிக் கொடுப்பான். ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எளிமையான பரிகாரங்களில், சக்தி வாய்ந்த பரிகாரங்களில் இதுவும் ஒன்று. ஒரு முறை செய்து பாருங்கள் நிச்சயம் கை மேல் பலனை பெறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: செலவை குறைக்க அஷ்டமி பரிகாரம்

ஒருமுறை நெய் வாங்கி தானம் கொடுத்து மன நிறைவை அடைந்து விட்டீர்கள். உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்து விட்டது என்றால் மாதம் தோறும், வரக்கூடிய வருமானத்திலிருந்து ஒரு சின்ன தொகையை ஒதுக்கி இறைவனுக்கு நெய் வாங்கி தானம் கொடுங்க. நிச்சயம் உங்கள் குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் சுபிட்சம் பெறும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -