ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கொள்ளை ஒரு முறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள்.

kollu weight loss
- Advertisement -

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினோம் என்றால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்போடும் இருக்கும். அந்த வகையில் நம் உடல் பருமனை குறைத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கக் கூடிய அற்புதமான தானியமாக திகழக்கூடிய கொள்ளை வைத்து எப்படி கடைசல் செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

இந்த காலத்தில் இருக்கக்கூடிய உடல் பருமனை எந்தவித பக்க விளைவுகளும் இன்றி எளிமையான முறையில் குறைக்கக்கூடிய அற்புத தானியம் தான் இந்த கொள்ளு. அப்படிப்பட்ட கொள்ளை மிகவும் ருசியான முறையில் எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.

- Advertisement -

செய்முறை

முதலில் குக்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு கப் சுத்தம் செய்யப்பட்ட கொள்ளை தண்ணீர் ஊற்றி கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் இரண்டு கப் அளவு தண்ணீரை சேர்க்க வேண்டும். அடுத்ததாக இரண்டு தக்காளி பழத்தை அதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது குக்கரை மூடி வைத்து ஐந்து விசில் வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.

குக்கரில் விசில் சென்ற பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் சீரகம் இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு அதில் 50 கிராம் வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் சிறிது வதங்கியதும் 3 பச்சை மிளகாய், 4 வர மிளகாய் போட்டு நன்றாக வதக்க வேண்டும்

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்திருக்கும் கொள்ளை அதில் சேர்க்க வேண்டும். கொள்ளில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கொள்ளு வேக வைத்த தண்ணீரில் நாம் ரசம் வைக்கலாம் அல்லது சூப்பு போலவும் செய்து குடிக்கலாம்.

இப்பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும். கொள்ளை நன்றாக ஆற வைக்க வேண்டும். கொள்ளு நன்றாக ஆறிய பிறகு அதில் பச்சையாக 50 கிராம் சின்ன வெங்காயம் மற்றும் சிறிது கொத்தமல்லி, சிறிது கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒருமுறை சுற்றி இறக்கி விட வேண்டும். இந்த கடைசல் ஒன்றிரண்டாக தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

கொள்ளை குக்கரில் வேக வைக்காமல் மண் சட்டியில் வேகவைத்தல் மிகவும் நன்மை பயக்கும். மேலும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்காமல் மத்தை பயன்படுத்தி கடைந்தால் அதன் ருசி மிகவும் சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஈஸி தூசி கருப்பு சென்னா ட்ரை மசாலாவை ரெசிபி இது. இவ்வளவு ஈஸியா, இவ்வளவு டேஸ்ட்டியா, இவ்வளவு ஹெல்தியா யாராலயும் சமைக்க முடியாது. பேச்சுலர்ஸ் கூட பத்து நிமிடத்தில் இதை செய்யலாம்.

இப்பொழுது கொள்ளு கடைசல் தயாராகி விட்டது. இதை சாதத்தில் சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறைந்து உடல் வலுப்பெற்று ஆரோக்கியத்துடன் வாழலாம்.

- Advertisement -