இன்று கூர்ம ஜெயந்தி. சொல்ல வேண்டிய மந்திரம்

perumal1
- Advertisement -

இன்று கூர்ம ஜெயந்தி. பெருமாள் 10 அவதாரங்கள் எடுத்ததாக புராண கதைகள் சொல்கிறது அல்லவா. அதில் பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்த நாள் இன்று. எல்லோருக்கும் புரியும்படி சொல்ல போனால் பெருமாளின் தசாவதாரத்தில் ஒரு அவதாரம் இந்த கூர்ம அவதாரம். தேவர்களும் அசுரர்களும், மேரு மலையை மத்தாக கொண்டு, பாற்கடலை கடைந்த போது, அந்த மலை ஒரு பக்கமாக சரியத் தொடங்கியது.

அதை பிடிக்க வேண்டும் என்பதற்காக பெருமாள், கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேரு மலைக்கு அடிப்பக்கத்தில் கூர்ம அவதாரம் எடுத்த பெருமாள் இருப்பதாக ஐதீகம். ஆனி மாதம் தேய்பிறை துவாதசி அன்று, இந்த கூர்மை அவதாரம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இன்று 2-7-2024 ஆனி மாதம் 18ஆம் தேதி துவா தசி திதி. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும். இந்த கடவுளை கும்பிட்டால், இந்த கிரக தோஷம் நீங்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல சனிபகவானால் உங்கள் ஜாதக கட்டத்தில் தோஷம், சனிபகவானால் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் இந்த கூர்ம அவதார பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் சனி பகவானின் தாக்கம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முடிந்தால் இன்று மாலை பூஜை அறையில் பெருமாள் திருவுருவப்படத்திற்கு அலங்காரம் செய்து, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெண்பொங்கல் நெய்வேதியமாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வழிபாடு செய்யும் போது பெருமாள் கூர்ம அவதாரம் எடுத்த இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்

- Advertisement -

பெருமாள் கூர்ம அவதார மந்திரம்.

ஓம் சங்கு சக்ர தரம் தேவம்
சந்திர மண்டலம் மத்யகம்
ஸ்ரீ பூமி சகிதம் தேவம்
கிரீடாதி விபூஷிதம்

ஸ்ரீவத்ஸ கௌஸ்து போரஸ்கம்
வனமாலா விராஜிதம்
கதா பத்ம தரம் சாந்தம்
கூர்ம கிரீவம் அஹம் பஜே!

- Advertisement -

இந்த மந்திரத்தை ஒரு முறை இன்றைய தினம் நீங்கள் உச்சரித்தாலும் போதும். சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்து விலகும். ஏழரைச் சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி இப்படி சனி பகவானால் ஜாதக கட்டத்தில் பிரச்சனை இருந்தால் இன்றைய தினம் நீங்கள் கட்டாயம் இந்த மந்திரத்தை படிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: விதியை மாற்றும் விநாயகர் வழிபாடு

கும்ப ராசிக்கு ஜென்ம சனி, கடக ராசிக்கு அஷ்டம சனி, இவர்களெல்லாம் கட்டாயம் இந்த மந்திரத்தை படிக்க வேண்டும். சனி திசை நடப்பவர்களும் இன்று இந்த மந்திரத்தை சொல்லுவது ரொம்ப ரொம்ப நல்லது. எங்களுடைய ஜாதக கட்டத்தில் சனிபகவானால் பிரச்சனை இல்லை என்றாலும் இந்த மந்திரத்தை படியுங்கள். அந்த பெருமாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கையை பெறலாம். பெருமாள் அவதாரம் எடுத்த இந்த நாளைப் பற்றிய புராண தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்ட மகிழ்ச்சியில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -