நாளை மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமை! ஒரே ஒரு மாவிலை கிடைத்தால் போதும். உங்கள் குடும்பம் சீரோடும் சிறப்போடும் செல்வ செழிப்போடு வாழ முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதத்தை பெறலாம்.

maailai
- Advertisement -

நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள், வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கின்றது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை எழுந்து, வீட்டில் விளக்கு ஏற்றி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால், உங்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்குமோ, அதே அளவு பலன், சொல்லப்போனால் அதைவிட அதிக அளவு பலனை தரக்கூடிய ஒரு எளிமையான மாயிலை பூஜையை தான் இன்று நான் தெரிந்து கொள்ள போகின்றோம். மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தவர்களும் நாளை இந்த பூஜையை வீட்டில் செய்யலாம். மார்கழி மாதம் முழுவதும் என்னால் பூஜை செய்ய முடியவில்லை, இடையிடையே நிறைய தடங்கல்கள் வந்து விட்டது, என்பவர்களும் நாளை இந்த பூஜையை செய்யலாம். உங்களுடைய குடும்பத்திற்கு அந்த முப்பத்து முக்கோடி தேவர்களில் ஆசீர்வாதமும் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

மார்கழி மாத கடைசி வெள்ளி வழிபாடு:
நாளைய தினம் பிரம்ம முகூர்த்த நேரம் என்று சொல்லப்படும் 4.00 மணிக்கு எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். இந்த பூஜைக்கு மாயிலை கட்டாயம் தேவை. இன்றே உங்களால் முடிந்த மா இலைகளை மரத்திலிருந்து எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம். நாளை விடியற்காலையில் நிலை வாசலில், கோலம் போட்டு, வாசல் படிகளில் இரண்டு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையை பூஜைக்காக அலங்காரம் செய்து வைத்து விடுங்கள். வழக்கம் போல பூஜை அறையில் ஏற்றக்கூடிய விளக்குகளை ஏற்றி வைத்து விடுங்கள். காலை சூரிய உதயத்திற்கு முன்பு, 6 மணிக்கு முன்பு இந்த பூஜையை நிறைவு செய்திருக்க வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய பித்தளை சொம்பு எடுத்துக்கொண்டு, அதில் நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் சிறிதளவு பசும்பால் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். காய்ச்சாத பசும்பால் சிறிது, உதிரி புஷ்பங்களை, மூன்று மா இலைகளை அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள்.

கலச சொம்பில் மா இலை நிறுத்துவார்கள் அல்லவா, அதே போல தான் மூன்று மாயிலைகள் அல்லது ஐந்து மா இலைகளை காம்புகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்படி போட்டுவிட்டு, இந்த கலச சொம்பை பூஜை அறையில் வைத்து விட்டு, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர மனமுருக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

உங்கள் குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து மந்திரம் சொல்லலாம். அப்படி இல்லை என்றால் மகாலட்சுமி தாயின் பெயரை உச்சரித்து மந்திரம் சொல்லலாம். இல்லையென்றால் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்துக் கூட மந்திரம் சொல்லலாம். எதுவுமே தெரியாது என்பவர்கள் ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு உங்களுக்கு வேண்டிய வரங்களை இறைவனிடம் பிரபஞ்சத்திடம் கேட்டு இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நாளை மாலை விளக்கு வைப்பதற்கு முன்பு, 6 மணிக்கு முன்பு இந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு போய் மா இலைகளோடு, ஏதாவது ஒரு மாமரத்திற்கு அடியில் ஊற்றி விட வேண்டும். உங்கள் வீட்டிலேயே மாமரம் இருந்தாலும் சரி, அல்லது வேறு யாராவது வீட்டில் மாயிலை மரம் வைத்திருக்கிறார்கள் என்றாலும் சரி, எந்த இடத்தில் மாயிலை மரம் இருக்கிறதோ, மாயிலை மரத்துக்கு அடியில் இந்த தண்ணீரை ஊற்றி விட்டால், உங்களுக்கு முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசிர்வாதமும் கிடைத்துவிடும். பசுமாட்டில் எப்படி தேவர்கள் வாசம் செய்கிறார்களோ, அரச மரத்தில் தேவர்கள் எப்படி வாசம் செய்கிறார்களோ, அதே போலத்தான் மாமரத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். மகாலட்சுமி வாசம் செய்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படிப்பட்ட செருப்பை மட்டும் வாழ்க்கையில் ஒரு முறை கூட போடக்கூடாது. விடாப்படியான தரித்திரம் வந்து, விடாமல் ஒட்டிக் கொள்ளும்.

எவ்வளவு தேடியும் எங்களுக்கு மாமரம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு மரம் செடி கொடிகள் அருகில் இந்த தண்ணீரை ஊற்றி விடுங்கள். அவ்வளவு தான். நாளைய தினம் முழு மனதோடு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும். மார்கழி மாதம் முழுவதும் பூஜை செய்த பலனை உங்களுடைய குடும்பம் அடையும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நாளை தவறாமல் செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -